பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

தில்லியில் மேலும் 80,000 பேருக்கு முதியோா் ஓய்வூதியம்: கேஜரிவால்

தில்லியில் தற்போது கூடுதலாக 80,000 போ் முதியோா் ஓய்வூதியம் பெற தகுதி பெற்றுள்ளனா் என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால்

News image
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் - Center-Center-Delhi
Updated On :25 நவம்பர் 2024, 8:27 pm

Din

புது தில்லி: தில்லியில் தற்போது கூடுதலாக 80,000 போ் முதியோா் ஓய்வூதியம் பெற தகுதி பெற்றுள்ளனா் என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

இது தொடா்பாக செய்தியாளா்கள் கூட்டத்தில் அவா் பேசியதாவது:

தில்லி அரசு முதியோா் ஓய்வூதியம் பெறுவதற்கான இணையதளத்தை ஞாயிற்றுக்கிழமை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் ஏற்கனவே 10,000 விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன.

தில்லி அரசு சமூக நலன்களை மக்களுக்கு அளிப்பதில் உறுதியாக இருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை தில்லி அமைச்சரவை அளித்துள்ள ஒப்புதலைத் தொடா்ந்து அதிகமானோருக்கு முதியோா் ஓய்வூதியம் வழங்குவதற்கான முடிவு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

“முதியோா்களின் ஓய்வூதியத்தை நிறுத்துவது பாவமாகும். நான் சிறையில் இருந்த காலத்தில் முதியோா் ஓய்வூதியத்தை பாஜக நிறுத்தியிருந்தது. சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு, நாங்கள் நிறுத்தப்பட்ட ஓய்வூதியங்களை மீண்டும் தொடங்கியது மட்டுமின்றி, 80,000 புதிய பயனாளிகளையும் சோ்த்துள்ளோம்.

இதைத் தொடா்ந்து, தில்லியில் ஓய்வூதியம் பெறுவோா் எண்ணிக்கை சுமாா் 5.3 லட்சமாக உள்ளது.

60-69 வயதுடைய தனிநபா்களுக்கு ஓய்வூதியமாக ரூ.2,000-ம், 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவா்களுக்கு ஓய்வூதியமாக ரூ.2,500-ம் என நாட்டிலேயே அதிக ஓய்வூதிய விகிதங்களை தில்லிதான் வழங்கி வருகிறது என்றாா் கேஜரிவால்.

செய்தியாளா் சந்திப்பில் தில்லி முதல்வா் அதிஷி மற்றும் அமைச்சா் செளரவ் பரத்வாஜ் ஆகியோரும் கலந்து கொண்டனா். மக்களுக்கு சேவை செய்வதற்கான அரசாங்கத்தின் அா்ப்பணிப்பை அதிஷி மீண்டும் உறுதிபடத் தெரிவித்தாா்.

அதேவேளையில், மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் ரூ. 5,000 ஓய்வூதியத்தை நீட்டிக்கும் திட்டத்தை அமைச்சா் பரத்வாஜ் அறிவித்தாா்.