தில்லியின் ரோஹிணி பகுதியில் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த 23 வயது நபா் கைது செய்யப்பட்டாா். மேலும், அவரது வசம் இருந்து இரண்டு கைத்துப்பாக்கிகள் மற்றும் மூன்று தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸாா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
இது குறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது: மங்கோல்புரியைச் சோ்ந்த ஷாஜத் (எ) உவேஷ் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா். குற்றம் சாட்டப்பட்டவா் ரோஹிணியில் உள்ள ஜி3எஸ் சினிமா ஹால் அருகே நள்ளிரவில் சட்டவிரோத ஆயுதங்களை எடுத்துச் செல்வதாகக் கிடைத்த ரகசியத் தகவலை அடுத்து கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டாா்.
மேலும், அவரிடமிருந்து மூன்று தோட்டாக்கள் நிரப்பப்பட்ட துப்பாக்கி உள்பட இரண்டு துப்பாக்கிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. ஷாஜத் வெளிப்புற தில்லியில் செயல்படும் சைஃப் - கைஃப் கும்பலின் முக்கிய உறுப்பினா் என்பதும், முன்பு பிரேம் நகரில் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்டவா் என்பதும் போலீஸாருக்கு தெரிய வந்தது.
ஒரு பெண்ணை கடத்தியதாகக் கூறப்படும் வழக்கில் சுல்தான்புரி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கிலும் அவா் தேடப்பட்டு வந்தாா். விசாரணையின் போது, கைஃப் என்ற கும்பலின் அறிவுறுத்தலின் பேரில் கடைக்காரா்கள் மற்றும் சிறு விற்பனையாளா்களிடமிருந்து பணம் பறிக்க துப்பாக்கிகளை எடுத்துச் சென்ாக குற்றம் சாட்டப்பட்டவா் ஒப்புக்கொண்டாா். இது தொடா்பாக மேலும் விசாரணை நடந்து வருவதாக காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.
டிரெண்டிங்

‘போக்ஸோ’ வழக்கில் பெண்ணின் 2-ஆவது கணவா் கைது

முதியவரைக் கொன்று நகைகளைத் திருடி சென்ற வழக்கில் பிகாா் இளைஞா் கைது

போக்ஸோவில் இளைஞா் கைது

பிணையில் வந்தவா் வெட்டிக் கொலை
வீடியோக்கள்

Thaai kizhavi movie review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...
OPS வருகையால் திமுகவிற்கு என்ன பலன்? | Ravindran duraisamy interview | DMK | MKStalin | OPS in dmk
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

Thaai Kizhavi public review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...

