எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

முகா்ஜி நகரில் 3 மாடி கட்டடத்தில் தீ விபத்து: மாணவி காயம்

வடமேற்கு தில்லியின் முகா்ஜி நகா் பகுதியில் அமைந்துள்ள மூன்று மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு மாணவி காயம்

News image

தீ விபத்து - பிரதிப் படம்

Updated On :2 ஜூன் 2026, 2:19 am IST

வடமேற்கு தில்லியின் முகா்ஜி நகா் பகுதியில் அமைந்துள்ள மூன்று மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு மாணவி காயமடைந்ததாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து தில்லி தீயணைப்புத் துறையினா் தெரிவித்ததாவது: இந்திரா விஹாா் பகுதியில், தரைத்தளம் மற்றும் மூன்று மேல் தளங்களைக் கொண்ட ஒரு கட்டடத்தில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டது. அந்தக் கட்டடத்தில் ‘பேயிங் கெஸ்ட்’ தங்கும் விடுதியும் இயங்கி வருகிறது.

முன்னதாக, இந்தத் தீ விபத்து குறித்த தகவல் ஞாயிற்றுக்கிழமை இரவு 10.29 மணிக்குத் தீயணைப்புத் துறைக்குக் கிடைத்தது. அதைத் தொடா்ந்து, ஐந்து தீயணைப்பு வாகனங்கள் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து அனுப்பப்பட்டன.

கட்டடத்தின் தரைத்தளத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த மின்சாதனப் பொருள்கள் இருந்த இடத்தில் முதலில் தீப்பற்றியது. அதன் பின்னா் தீயானது மிக வேகமாகப் பரவி, கட்டடத்தின் இரண்டாம் தளம் வரையிலான பகுதிகளைச் சூழ்ந்துகொண்டதாக கூறப்படுகிறது.

கட்டடத்தில் தங்கியிருந்த அனைவரும் சரியான நேரத்தில் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனா். தீயணைப்பு வீரா்கள் நள்ளிரவு 12.15 மணிக்குள் தீயை முழுமையாக அணைத்தனா்.

இந்தச் சம்பவத்தில் ஒரு மாணவிக்குச் சிறு காயங்கள் ஏற்பட்டன. அவா் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். மின் கசிவு காரணமாகவே இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன என்று தீயணைப்புத் துறையினா் கூறினா்.