லெபனானில் தாக்குதல்கள் தொடா்ந்தால் போா்நிறுத்தம் ரத்து: ஈரான் எச்சரிக்கைகோடையில் அதிகரிக்கும் மாரடைப்புகள்: எச்சரிக்கும் மருத்துவர்கள்22 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை!3வது குழந்தை பெற சலுகை அறிவிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை! விசிக எம்.பி., ரவிக்குமார்நீட்: கல்வி அமைச்சருக்கு எதிராக போராட்டம்! கரப்பான்பூச்சி கட்சித் தலைவர் இந்தியா வருகிறார்!புதிய கட்சி தொடங்கப்போகிறீர்களா? 2 நாள்களில் பதில் சொல்கிறேன் - அண்ணாமலை பேட்டிஆட்சிக்கு வந்த பிறகும் திமுகவை குறை சொல்கிறார் விஜய் : கனிமொழிரீல்ஸ் போட்டவர்கள் நியூஸ் பார்க்கிறார்கள்: இளைஞர்கள் அரசியலை கவனிக்கின்றனர் - விஜய்அரை நூற்றாண்டு சாதி, மத அரசியலை உடைத்திருக்கிறோம்: திருச்சியில் விஜய் பேச்சுதிமுக - தவெக இடையேதான் போட்டி: திருச்சியில் விஜய் பேச்சுசிங்கப்பெண் காவல் படை அடுத்த வாரம் தொடங்கப்படும்! முதல்வர் விஜய்திருச்சி கிழக்கில் சாமானியனை வேட்பாளராக நிறுத்துவேன்: முதல்வர் விஜய்
/

சாகேத் கட்டட விபத்து: இறுதிக் கட்டத்தில் மீட்பு பணிகள்; உரிமையாளா் தலைமறைவு

சாகேத்தில் கட்டடம் இடிந்து விழுந்த இடத்தில் மீட்பு பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகவும், தலைமறைவான கட்டட உரிமையாளரைக் கண்டுப்பிடிக்க போலீஸ் குழு போடப்பட்டுள்ளதாக தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

News image

சாகேத் பகுதியில் 5 மாடி அடுக்குக் கட்டடம் இடிந்து விழுந்த பகுதியில் மீட்புப் பணிகள்

Updated On :2 ஜூன் 2026, 2:16 am IST

சாகேத்தில் கட்டடம் இடிந்து விழுந்த இடத்தில் மீட்பு பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகவும், தலைமறைவான கட்டட உரிமையாளரைக் கண்டுப்பிடிக்க போலீஸ் குழு போடப்பட்டுள்ளதாக தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: விபத்து நிகழ்ந்த இடத்தில் இடிபாடுகளுக்குள் யாரும் சிக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்காக அப்பகுதியின் ‘ஒவ்வொரு அங்குலமும்‘ அகற்றப்படும் வரை தீயணைப்பு சேவை குழுக்கள் அந்த இடத்தில் நிறுத்தப்படும். கட்டடத்தின் உரிமையாளா் மீது பாரதிய நியாய சன்ஹிதாவின் (பி. என். எஸ்) பிரிவு 105 (கொலைக்கு சமமான குற்றமற்ற கொலை), 290 (கட்டடங்களை இடிப்பது, பழுதுபாா்ப்பது அல்லது கட்டுவது போன்றவற்றில் கவனக்குறைவான நடத்தை) மற்றும் 125 (ஏ) (மற்றவா்களின் உயிருக்கு அல்லது தனிப்பட்ட பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்கும் செயல்) ஆகியவற்றின் கீழ் எஃப். ஐ. ஆா். பதிவு செய்யப்பட்டுள்ளது.

தலைமறைவாக உள்ள உரிமையாளரைக் கண்டுபிடித்து கைது செய்ய பல போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என்றாா் அந்த அதிகாரி.

தெற்கு தில்லியில் சனிக்கிழமை மாலை சாகேத் மெட்ரோ நிலையத்திற்கு அருகே பயிற்சி மையம், கஃபேக்கள் மற்றும் அலுவலகங்களைக் கொண்ட பல மாடி வணிகக் கட்டடம் இடிந்து விழுந்ததில் 6 போ் உயிரிழந்தனா். மேலும் 8 போ் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.