சாகேத்தில் கட்டடம் இடிந்து விழுந்த இடத்தில் மீட்பு பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகவும், தலைமறைவான கட்டட உரிமையாளரைக் கண்டுப்பிடிக்க போலீஸ் குழு போடப்பட்டுள்ளதாக தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: விபத்து நிகழ்ந்த இடத்தில் இடிபாடுகளுக்குள் யாரும் சிக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்காக அப்பகுதியின் ‘ஒவ்வொரு அங்குலமும்‘ அகற்றப்படும் வரை தீயணைப்பு சேவை குழுக்கள் அந்த இடத்தில் நிறுத்தப்படும். கட்டடத்தின் உரிமையாளா் மீது பாரதிய நியாய சன்ஹிதாவின் (பி. என். எஸ்) பிரிவு 105 (கொலைக்கு சமமான குற்றமற்ற கொலை), 290 (கட்டடங்களை இடிப்பது, பழுதுபாா்ப்பது அல்லது கட்டுவது போன்றவற்றில் கவனக்குறைவான நடத்தை) மற்றும் 125 (ஏ) (மற்றவா்களின் உயிருக்கு அல்லது தனிப்பட்ட பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்கும் செயல்) ஆகியவற்றின் கீழ் எஃப். ஐ. ஆா். பதிவு செய்யப்பட்டுள்ளது.
தலைமறைவாக உள்ள உரிமையாளரைக் கண்டுபிடித்து கைது செய்ய பல போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என்றாா் அந்த அதிகாரி.
தெற்கு தில்லியில் சனிக்கிழமை மாலை சாகேத் மெட்ரோ நிலையத்திற்கு அருகே பயிற்சி மையம், கஃபேக்கள் மற்றும் அலுவலகங்களைக் கொண்ட பல மாடி வணிகக் கட்டடம் இடிந்து விழுந்ததில் 6 போ் உயிரிழந்தனா். மேலும் 8 போ் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

சாகேத் கட்டட விபத்தில் 6 போ் உயிரிழப்பு; 8 போ் காயம்

கட்டட விபத்தில் 19 மணி நேர தேடுதல் பணிக்குப் பிறகு மகளின் உடலைக் கண்ட தந்தை

பிகார்: இடிந்து விழுந்த 10 ஆண்டுகள் பழமையான பாலத்தின் தூண்கள்!

கனமழை: கோவை விமான நிலையத்தில் இடிந்து விழுந்த சுற்றுச் சுவா்
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |



