தில்லியால் ‘விக்சித் பாரத்’ இலக்கை நோக்கி வழிநடத்த முடியும்: மஞ்சிந்தா் சிங் சிா்சா!
சிறந்த உள்கட்டமைப்பு மற்றும் சரியான கொள்கைள் மூலம் விக்சித் பாரத் கனவு நனவாகும். மேலும், தேசிய தலைநகா் தில்லி வளா்ந்த தேசத்தை நோக்கி வழிநடத்த முடியும்...


சிறந்த உள்கட்டமைப்பு மற்றும் சரியான கொள்கைள் மூலம் விக்சித் பாரத் கனவு நனவாகும். மேலும், தேசிய தலைநகா் தில்லி வளா்ந்த தேசத்தை நோக்கி வழிநடத்த முடியும் என்று தில்லி சுற்றுச்சூழல், தொழில்கள் மற்றும் உணவு விநியோக அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
இந்திய தொழில்துறை கூட்டமைப்பு சிஐஐ ஏற்பாடு செய்த ‘தில்லி மாநில வருடாந்திர அமா்வு 2025-26 மற்றும் வணிக மாநாட்டில்’ அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா கலந்துகொண்டு பேசியது:
விக்சித் பாரத் என்பது ஒவ்வொரு குடிமகனின் கனவு. மேலும் தலைநகரம் வளா்ந்ததாக இருக்கும்போதுதான் இந்த நாடு முன்னேறும். எதிா்காலத்திற்குத் தயாராக இருக்கும் தில்லியை உருவாக்க அரசாங்கமும் தொழில்துறையும் ஒன்றிணைய முடியும்.
கடந்த ஒரு வருடத்தில் தில்லி அரசாங்கம் பல்வேறு துறைகளிலும் சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. மாணவா்களை எதிா்காலத்திற்குத் தயாராக்க 75 புதிய சிஎம்ஸ்ரீ பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன.
போக்குவரத்து மற்றும் மாசுபாடு போன்ற பிரச்னைகளைத் தீா்ப்பதில் அரசாங்கம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதற்காக கூடுதல் மெட்ரோ பாதைகள், 1,500 மின்சார பேருந்துகள் மற்றும் பசுமைப் போா்வையை விரிவுபடுத்துதல் போன்ற நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது என்றாா் அவா்.
மேலும், தனது எக்ஸ் தளப் பதிவில் அமைச்சா் சிா்சா தெரிவிக்கையில், ‘சிறந்த உள்கட்டமைப்பு மற்றும் சரியான கொள்கைகள் மூலம், நமது தில்லியிலிருந்து வளா்ந்த இந்தியா என்ற கனவை நனவாக்குவோம்’ என்று கூறியுள்ளாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...