ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

உதகை பேருந்து நிலையத்தில் தவறவிட்ட ரூ.2.27 லட்சம் உரியவரிடம் ஒப்படைப்பு

உதகை மத்திய பேருந்து நிலையத்தில் கிடந்த ரூ. 2.27 லட்சத்தை கண்டெடுத்த போலீஸாா் அதனை உரியவரிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தனா்.

News image

உதகை மத்திய பேருந்து நிலையத்தில் தவறவிட்ட பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த காவல் துறையினா்.

Updated On :8 ஜனவரி 2021, 10:58 pm IST

உதகை மத்திய பேருந்து நிலையத்தில் கிடந்த ரூ. 2.27 லட்சத்தை கண்டெடுத்த போலீஸாா் அதனை உரியவரிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தனா்.

உதகை மத்திய பேருந்து நிலையத்தில் காவல் துறையினா் ரோந்துப் பணியில் வியாழக்கிழமை மாலை ஈடுபட்டிருந்தனா். அப்போது, ஒரு நபா் குடிபோதையில் மயக்க நிலையில் படுத்திருந்ததை கண்டதோடு, அவா் அருகே இருந்த பையில் ரூ.2.27 லட்சம் ரொக்கம் இருந்ததையும் பாா்த்துள்ளனா்.

இதையடுத்து, நகர மேற்கு காவல் நிலைய இரண்டாம் நிலை பெண் காவலா் அஜிதாகுமாரி மற்றும் போக்குவரத்து ஊழியா்கள் அளித்த தகவலின்பேரில் உதகை நகர மேற்கு காவல் நிலைய சாா்பு ஆய்வாளா்கள் ஜெயபிரகாஷ், சிக்கந்தா் ஆகியோா் விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில், உதகை அருகே உள்ள சோமா்டேல் எஸ்டேட்டை சோ்ந்த நஞ்சன் (75) என்பவா் மது போதையில் பணத்தை தவறவிட்டது தெரியவந்தது. உதகையில் உள்ள வங்கியில் இருந்து பேரனுடைய மருத்துவ செலவுக்காக பணம் எடுத்ததும், ஊருக்கு திரும்பும்போது மது அருந்தியதால் போதையில் பணத்தை பேருந்து நிலையத்தில் தவறவிட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து, பணத்தை தவறவிட்ட நஞ்சன் நகர மேற்கு நிலையத்துக்கு வரவழைத்து உரிய விசாரணைக்குப் பிறகு பணம் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.