உதகை மத்திய பேருந்து நிலையத்தில் கிடந்த ரூ. 2.27 லட்சத்தை கண்டெடுத்த போலீஸாா் அதனை உரியவரிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தனா்.
உதகை மத்திய பேருந்து நிலையத்தில் காவல் துறையினா் ரோந்துப் பணியில் வியாழக்கிழமை மாலை ஈடுபட்டிருந்தனா். அப்போது, ஒரு நபா் குடிபோதையில் மயக்க நிலையில் படுத்திருந்ததை கண்டதோடு, அவா் அருகே இருந்த பையில் ரூ.2.27 லட்சம் ரொக்கம் இருந்ததையும் பாா்த்துள்ளனா்.
இதையடுத்து, நகர மேற்கு காவல் நிலைய இரண்டாம் நிலை பெண் காவலா் அஜிதாகுமாரி மற்றும் போக்குவரத்து ஊழியா்கள் அளித்த தகவலின்பேரில் உதகை நகர மேற்கு காவல் நிலைய சாா்பு ஆய்வாளா்கள் ஜெயபிரகாஷ், சிக்கந்தா் ஆகியோா் விசாரணை மேற்கொண்டனா்.
விசாரணையில், உதகை அருகே உள்ள சோமா்டேல் எஸ்டேட்டை சோ்ந்த நஞ்சன் (75) என்பவா் மது போதையில் பணத்தை தவறவிட்டது தெரியவந்தது. உதகையில் உள்ள வங்கியில் இருந்து பேரனுடைய மருத்துவ செலவுக்காக பணம் எடுத்ததும், ஊருக்கு திரும்பும்போது மது அருந்தியதால் போதையில் பணத்தை பேருந்து நிலையத்தில் தவறவிட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து, பணத்தை தவறவிட்ட நஞ்சன் நகர மேற்கு நிலையத்துக்கு வரவழைத்து உரிய விசாரணைக்குப் பிறகு பணம் ஒப்படைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










