வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

பெருந்தலைவரின் நிழலில்

பெருந்தலைவரின் நிழலில் - பழ.நெடுமாறன்; பக்.656; ரூ.600; தமிழ்க்குலம் பதிப்பாலயம், சென்னை-43; )044 - 2264 0451.

News image
Updated On :2 ஜூலை 2017, 6:19 pm

பெருந்தலைவரின் நிழலில் - பழ.நெடுமாறன்; பக்.656; ரூ.600; தமிழ்க்குலம் பதிப்பாலயம், சென்னை-43; )044 - 2264 0451.
சுதந்திரப் போராட்ட வீரரும், முன்னாள் தமிழக முதலமைச்சருமான காமராசரின் அருமை பெருமைகளை, சாதனைகளைச் சொல்லும் நூல்.
மிக எளிய குடும்பத்தில் பிறந்த ஒருவர், அகில இந்திய அளவில் பெரிய தலைவராக உயர்ந்ததன் பின்னணியில் இருந்த அவருடைய நற்பண்புகள் இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளன.
1954 இல் தமிழக முதல்வராக பதவியேற்ற காமராசரின் காலத்தில் தான் 11 ஆம் வகுப்பு வரை இலவச் கல்வி அளிக்கப்பட்டது. 1954 இல் பள்ளி செல்லும் குழந்தைகளின் எண்ணிக்கை 45 சதவீதமாக இருந்தது. காமராசரின் பதவிக் காலத்தில் அது 77.3 சதவீதமாக உயர்ந்தது. அவர் ஆட்சிக் காலத்தில்தான் தமிழ்நாட்டின் 13,638 கிராமங்கள் மின் வசதி பெற்றன.
நெய்வேலி பழுப்பு நிலக்கரி திட்டம், பெரம்பூர் தொடர் வண்டித் தொழிற்சாலை, சேலம் உருக்குத் தொழிற்சாலை உட்பட பல அரசு தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன. ராயல் என்பீல்டு, அசோக் லேலண்ட், டி.ஐ. சைக்கிள் உட்பட பல தனியார் தொழிற்சாலைகள் தொடங்க ஊக்கம் அளிக்கப்பட்டது. மணிமுத்தாறு அணை, அமராவதி அணை, வைகை அணை, பரம்பிக் குளம் - ஆழியாறு அணை உள்ளிட்ட பல அணைகள் கட்டப்பட்டன. பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் விவசாயம் செழித்தது.
இவ்வாறு மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற, மிகவும் திட்டமிட்டுச் செயலாற்றிய காமராசர், கடைசி வரை எளிய வாழ்க்கை வாழ்ந்தார் என்பதும், ரேஷன் அரிசியில்தான் அவருக்கான உணவு சமைக்கப்பட்டது என்பதும், சொந்தவீடு எதுவும் அவருக்கில்லை என்பதும், ஏழை மக்களின் தொண்டராகவே கடைசி வரை அவர் வாழ்ந்தார் என்பதும் இன்றைய அரசியல் சூழ்நிலையில் தொடர்புபடுத்திப் பார்க்கும்போது நம்மை நெகிழ வைக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.