சில கவிதைகள் சில கதைகள் சில கட்டுரைகள் - அழகிய சிங்கர்; பக். 136; ரூ.100; விருட்சம், சென்னை - 33; )044 - 2421 0610.
எழுத்தாளர் அழகியசிங்கரின் 27 கவிதைகள், 8 சிறுகதைகள், 12 கட்டுரைகள் ஆகியவை அடங்கிய தொகுப்பு இது. பெரும்பாலான சிறுகதைகள் மிகவும் எளிமையாகவும் நேரடித்தன்மையுடனும் இருக்கின்றன. எழுத்தாளரான வங்கி அதிகாரி மீது வாடிக்கையாளர் ஒருவர் புகார் கொடுக்க, அதனால் அவருக்கு ஏற்படும் மன உளைச்சல்கள், திடீரென பணி நீக்கம் செய்யப்பட்ட வங்கி ஊழியர் ஒருவரை மீண்டும் பணியில் சேர்க்க முயற்சி செய்யும் வங்கி அதிகாரி முடிவில் தோல்வியடைவது - இப்படி பெரும்பாலான கதைக்களன் வங்கியாகவே இருப்பது சலிப்பூட்டுகிறது. மேலும் மாம்பலம், வங்கி அதிகாரி, 93 வயது அப்பா, அசோகமித்திரன், ராமகிருஷ்ணன் போன்ற மேற்கோள்கள் கதைத்தன்மையைக் குறைத்து கட்டுரைத்தன்மையைக் கூட்டி விடுகின்றன.
கட்டுரைகளைப் பொருத்தவரை தான் வசிக்கும் தெரு, கார் வாங்கிய அனுபவம், பிரமிள் பற்றிய பேச்சு, பாரதியார் குறித்த நினைவுகள் என்று பல வகையில் உள்ளன. இவற்றுள் பிரமிள் பற்றிய கட்டுரை அருமை.
அதிலும் குறிப்பாக ஆத்மாராமின் இரங்கல் கூட்டத்தில் பிரமிள் உணர்ச்சிவசப்பட்டு அழுதது, கு.ப.ராஜகோபாலன் தன்னுடன் மௌனியை அழைத்துச் சென்று வ.ரா.வை சந்தித்தபோது வ.ரா.வுக்கும் மௌனிக்கும் இடையே நிகழ்ந்த உரையாடல் ஆகியவை வியப்பளிப்பவையாக உள்ளன. மறதியைப் பற்றிய கட்டுரையும் குறிப்பிடத்தக்கது.
இதுபோன்று வெவ்வேறு விதமான படைப்புகளடங்கிய தொகுப்புக்கு பொருளடக்கம் இன்றியமையாதது. அது இத்தொகுப்பில் இல்லை. ஆனால் அச்சுப்பிழைகளுக்கோ பஞ்சமில்லை (ஆபீஸ் அபிஸ் ஆனதை மன்னிக்கலாம், ஆனால் மௌனி பௌனி ஆகலாமா?). பொழுதுபோக்காகப் படிக்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தேசிய கீதம் குறித்து நான்தான் தீர்மானிப்பேன்: ஜே.சி.டி. பிரபாகர்!

நீட்: தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பத்துக்கு ரூ. 1 கோடி இழப்பீடு வழங்க பிரதமருக்கு சிஜேபி கடிதம்!

தொடர்ச்சியாக 2-ஆவது வெற்றி..! ஸ்காட்லாந்தை வீழ்த்தியது மேற்கிந்தியத் தீவுகள்!
பெத்தி - இரு வாரங்களில் ரூ. 400 கோடி வசூல்!
விடியோக்கள்

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK



