ஓய்வூதியம் பெற வந்த முதியவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி! வங்கிக் கணக்கில் ரூ.759 கோடி!வானில் தோன்றும் அதிசயம்! ஜூலை 17ஆம் தேதி வரை காத்திருங்கள்!பழனி கோயிலுக்குச் சொந்தமான நிலப் பத்திரப்பதிவு செல்லாது: உயர் நீதிமன்ற மதுரை கிளைஊழியர்கள் இல்லை, ரயில்கள் நிற்காது! ரூ.6 கோடியில் உருவான அதிசய ரயில் நிலையம்! தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர்
/

மீனாட்சி அம்மன் ஆவணி மூலத் திருவிழா தொடங்கியது: ஆக.21-ல் சுந்தரேஸ்வரருக்கு பட்டாபிஷேகம் 

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் ஆவணி மூலத் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. 

News image
Updated On :10 ஆகஸ்ட் 2018, 12:42 pm IST

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் ஆவணி மூலத் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. 

சுந்தரேசுவரரின் 12 திருவிளையாடல்களை மையமாக வைத்து நடைபெறும் ஆவணி மூலத் திருவிழா ஆக. 9(நேற்று) கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

ஆகஸ்ட் 21-ல் கருங்குருவிக்கு உபதேசம், 16-ம் தேதி நாரைக்கு மோட்சம் அருளிய லீலை, 17-ல் மாணிக்கம் விற்ற லீலை, 18-ல் தருமிக்குப் பொற்கிழி அருளியது எனத் தொடர்ச்சியாக 19-ல் உலவாக்கோட்டை, 20-ல் பாணனுக்கு அங்கம் வெட்டியது, திருஞானசம்பந்தர் சைவ சமயத்தை நிலைநாட்டியது, 

ஆக.21-ல் சுந்தரேஸ்வரருக்கு பட்டாபிஷேகம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. ஆகஸ்ட் 22-ல் மாணிக்கவாசகருக்காக நரியைப் பரியாக்கிய லீலையும், 23-ல் தேதி பிட்டுக்கு மண் சுமந்த லீலை நடைபெற உள்ளது.

திருவிழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி மதுரையில் எழுந்தருள்வார். அன்று காலை திருக்கோயிலில் இருந்து சுவாமி வைகை ஆற்றோரம் உள்ள புட்டுத்தோப்பு மண்டபத்தில் எழுந்தருள்வார். 

ஆக.,24-ல் விறகு விற்றல், 25-ல் சட்டத்தேர், 26-ல் தீர்த்த உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது. 

திருவிழா முடியும் வரை திருக்கோயில் சார்பிலோ, உபயதாரர் சார்பிலோ திருக்கல்யாணம், தங்கரதம் உள்ளிட்ட உபய நிகழ்ச்சிகள் நடைபெறாது என கோயில் இணை ஆணையர் என். நடராஜன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.