குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

உங்கள் நட்சத்திரம் எது? உங்களுக்கேற்ற விருட்சம் இதுதான்!

விருட்சம் என்றால் மரம். இதில் 27 நட்சத்திரங்களுக்கும் ஒவ்வொரு விருட்சம் உள்ளது.

News image
Updated On :29 மே 2019, 9:06 am

DIN

விருட்சம் என்றால் மரம். இதில் 27 நட்சத்திரங்களுக்கும் ஒவ்வொரு விருட்சம் உள்ளது. தோஷம் உள்ளவர்கள் அந்தந்த விருட்சத்தை வழிபாடு செய்து வரலாம். 

27 நட்சத்திரத்திற்குரிய விருட்சம்

அஸ்வினி - எட்டி 

பரணி - நெல்லி

கார்த்திகை - அத்தி

ரோகிணி - நாவல்

மிருகசீரிடம் - கருங்காலி

திருவாதிரை - செங்கருங்காலி

புனர்பூசம் - மூங்கில்

பூசம் - அரசு

ஆயில்யம் - புன்னை

மகம் - ஆலமரம்

பூரம் - பலா

உத்திரம் - அலரி

அஸ்தம் - வேலம்

சித்திரை - வில்வம்

சுவாதி - மருதம், 

விசாகம் - விளா

அனுஷம் - மகிழம் 

கேட்டை - பிராய்

மூலம் - மாமரம்

பூராடம் - வஞ்சி

உத்திராடம் - பலா

திருவோணம் - எருக்கு

அவிட்டம் - வன்னி

சதயம் - கடம்பு

பூரட்டாதி - தேமா

உத்திரட்டாதி - வேம்பு

ரேவதி - இலுப்பை

ஒருவரது பிறந்த நட்சத்திரத்திற்கு உரிய மரக்கன்றை வாங்கி ஒரு கோவில் சார்ந்த வனப்பகுதியில் தென்மேற்குப் பகுதியில் சூரியக்கதிர்கள் படும் இடத்தில் நடவேண்டும். அந்த மரக்கன்றை அவரது பிறந்த நட்சத்திர நாளில் நடுவது மிக நன்று.

மரக்கன்றை நட்டதும் அவரது கையால் நவதானியங்களை ஊற வைத்த நீரை அச்செடிக்கு விட்டு ஊறிய நவதானியங்களையும் அந்த மரக்கன்றுக்கு உரமாகப்போட வேண்டும். இப்படிச் செய்தால் மரக்கன்று வளர வளர அதை நட்டவரின் வாழ்க்கையும் மலரும். அந்த மரக்கன்றை நட்டவரின் பிறந்த ஜாதகத்தில் இருக்கும் அனைத்து தோஷங்களையும் மரக்கன்று ஈர்த்துவிடும்.

அம்மரக்கன்று பூத்து, காய்க்கும்போது உரியவரின் வாழ்க்கையும் செழிப்பாக இருக்கும். அவரது கர்ம வினைகளை நீக்கும் தன்மை கொண்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.