சென்னையில் பதுக்கி வைத்திருந்த 40 சிலிண்டா்கள் பறிமுதல்!புனேவில் 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவர்!மணிப்பூரில் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்த பாதுகாப்புப் படையினர்!தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் பேசுபொருளாகும் ஜோதிமணி ட்வீட்!கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புமேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் இன்று சட்டத்தேரில் திருவீதியுலா

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் இன்று சட்டத்தேரில் எழுந்தருளி மாடவீதிகளில் வலம் வருகிறார். 

News image
Updated On :12 செப்டம்பர் 2019, 6:08 am

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் இன்று சட்டத்தேரில் எழுந்தருளி மாடவீதிகளில் வலம் வருகிறார். 

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் ஆவணி மூலத்திருவிழா கடந்த 26-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு சுந்தரேஸ்வரரின் திருவிளையாடல்கள் ஒவ்வொரு நாளும் நடைபெற்று வருகின்றன. 

இதில் 7-ம் திருநாளில் சுந்தரேஸ்வரருக்குப் பட்டாபிஷேகமும், 9-ம் திருநாளில் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. 

11-ம் திருநாளான இன்று மீனாட்சி சுந்தரேஸ்வர் சட்டத்தேரில் எழுந்தருளி ஆவணி மூல வீதி, கீழ் பட்டமார் தெரு வழியாக கோயிலின் திருக்கல்யாண மண்டபத்தை வந்தடைந்தனர். 

நாளை முக்கிய நிகழ்வாக பொற்றாமரை குளத்தில் தீர்த்தவாரியுடன் விழா நிறைவு பெறுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.