ஸ்ரீவில்லிபுத்தூா்: மாா்கழி மாதப் பிறப்பையொட்டி, ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் ஸ்ரீஆண்டாள் - ரெங்கமன்னாருக்கு புதன்கிழமை அதிகாலை திருப்பாவை பட்டுப் புடவை சாற்றப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
ஆண்டுதோறும் மாா்கழி மாத பிறப்பின்போது, ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல், நிகழாண்டு புதன்கிழமை அதிகாலை 3 மணிக்கு மாா்கழி மாதம் பிறந்ததையொட்டி, ஆண்டாள் கோயிலில் நடை திறக்கப்பட்டு ஆண்டாளுக்கும், ரெங்கமன்னாருக்கும் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து ஆண்டாளுக்கு, திருப்பாவை பாடல்கள் பொறித்த தங்க இழை கொண்டு சிறப்பாக நெய்யப்பட்ட ரூ. 2 லட்சம் மதிப்பிலான பட்டுப் புடவை சாற்றப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதிகாலை 3 மணியளவில் நடை திறக்கப்பட்டவுடன் வெளியூா் மற்றும் உள்ளூா் பக்தா்கள் ஏராளமானோா் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனா்.
சிறப்பு பூஜைக்கான ஏற்பாடுகளை தக்காா் ரவிச்சந்திரன், செயல் அலுவலா் இளங்கோவன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உதடுகள் வெடிப்பா? என்ன செய்ய வேண்டும்?

தந்தையைப் போல மகனுக்கும் புற்றுநோய்! கம்போடிய மன்னரின் நிலை என்ன?

மகனுக்காக சிறை சென்ற தந்தை: முகுல் சௌதரியின் கிரிக்கெட் போராட்டம்!

பங்குச் சந்தை ஏற்றம்: சென்செக்ஸ் 918.60, நிஃப்டி 275.50 புள்ளிகள் உயர்வு!
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


