தீபாவளிக்கு ஊருக்குப் போறீங்களா? ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குவது எப்போது?பிரபல பெருங்காய நிறுவனங்களுக்கு என்ன ஆனது? தடை விதிப்பின் பின்னணி!விவசாயிகள் மீதான வழக்குகளை ரத்து செய்வது முதல்முறையல்ல! பட்டியலிட்ட உதயநிதி!திமுக ஆட்சியில் விவசாயிகள், ஆசிரியர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து! முதல்வர் விஜய்டிஜிட்டல் முறையில் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ்! முதல்வர் விஜய் அறிவிப்புமீஞ்சூரில் கடல் நீர் சுத்தகரிப்பு ஆலை! முதல்வரின் அதிரடி அறிவிப்புகள்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,800 சரிந்தது! இன்றைய நிலவரம்!ஈரானிய எண்ணெய்க் கப்பல்கள் உள்பட 100 இடங்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல்!சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு மேலும் கட்டுப்பாடு சுபாஷ் சந்திரா சொத்துகளை விற்கத் தடை- ரூ.6.5 கோடி கடன் தீா்வுத் திட்டமும் நிறுத்திவைப்புஎழுத்தாளா் கே.ஆா்.நரசய்யாவுக்கு சிவசங்கரி விருது: சிறந்த நூலாக ‘அப்பன் திருவடி’ தோ்வுமகப்பேறு விடுப்பை 365 நாள்களாக உயா்த்தி அரசாணை வெளியீடு செப்.4-இல் விண்ணில் பாய்கிறது இ.ஓ.எஸ்.-5 செயற்கைக்கோள் அமெரிக்கா உடன்பட்டால் போா் நிறுத்தத்துக்கு திரும்ப தயாா்: ஈரான்ராஜீவ் காந்தி சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

செல்போன் கொண்டு செல்ல தடை! மருதமலை முருகன் கோயிலும் அமல்!!

மருதமலை முருகன் கோயிலும் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

மருதமலை முருகன் கோயில்

மருதமலை முருகன் கோயில் - video grab

Published On :2 செப்டம்பர் 2026, 12:25 pm IST

தமிழகம் முழுவதும் கோயில்களுக்குள் ரீல்ஸ் எடுப்பதைத் தடுக்க, ரீல்ஸ் எடுக்காத பக்தர்களும் பாதிக்கப்படும் வகையில், கோயில்களுக்குள் செல்போன் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு முழுவதும் சுமார் 50க்கும் மேற்பட்ட முக்கிய கோயில்களில், செல்போன்களை வெளியில் பக்தர்கள் வைத்துச் சென்றுவிட்டும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது கோவையில் அமைந்துள்ள, பேரூர் வட்டம், மருதமலை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலிலும் செப். 1 முதல் செல்போன் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

01.09.2026 முதல் திருக்கோயில் வளாகத்திற்குள் கைப்பேசி தடை செய்யப்பட்டுள்ள நிலையில், கைப்பேசி பாதுகாப்பு மையம் திருக்கோயில் படிப்பாதையில், மலை ஏறிச் செல்பவர்களுக்கும், அடிவாரத்திலும் மற்றும் மலைக்கு மேல் பகுதியிலும் அமைக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் தங்களது கைப்பேசியினை கைப்பேசி பாதுகாப்பு மையத்தில், ரூ.5/- கட்டணம் செலுத்தி பாதுகாப்பாக வைக்கும் வகையில் திருக்கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

ஆனால், கோயிலுக்குள் செல்போன் தடை செய்யப்படுவதால், பக்தர்கள் கோயிலுக்குள் இருக்கும் சில கட்டணச் சேவைகளைப் பயன்படுத்த முடியாமல் போகிறது. சிறப்பு தரிசன வரிசையில் செல்ல வேண்டும் என்றால் முடியாது, பிரசாதங்களை வாங்கும்போது பணமில்லாமல் இருந்தால் வாங்க முடியாத நிலை ஏற்படுவதாக பக்தர்கள் அதிருப்தி அடைந்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.