தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் திரிணமூல் ஆதரவாளரை கன்னத்தில் அறைந்த மமதா பானர்ஜி!ஈரானை இன்று இரவு கடுமையாகத் தாக்குவோம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

சிட்னி டெஸ்ட்: இரண்டு கேட்சுகளை நழுவவிட்ட ரிஷப் பந்த்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் இரண்டு கேட்சுகளை நழுவ விட்டுள்ளார்.

News image
Updated On :7 ஜனவரி 2021, 11:00 am IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் இரண்டு கேட்சுகளை நழுவ விட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடுகிறது.

ஒருநாள் தொடரை 1-2 எனத் தோற்றது இந்திய அணி. எனினும் டி20 தொடரை 2-1 என வென்றது. 

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது ஆஸ்திரேலியா. மெல்போர்னில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை 1-1 என சமன் செய்துள்ளது. 3-வது டெஸ்ட் சிட்னியில் இன்று தொடங்கியுள்ளது. 4-வது டெஸ்ட் பிரிஸ்பேனில் ஜனவரி 15-ல் தொடங்குகிறது.

டாஸ் வென்ற ஆஸி. கேப்டன் டிம் பெயின், பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டேவிட் வார்னர், 5 ரன்களில் சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு மழையால் ஆட்டம் தடைபட்டது. ஆட்டம் மீண்டும் தொடர்ந்தபோது புகோவ்ஸ்கியும் லபுசானும் நிதானமாக விளையாடினார்கள். இன்றும் அற்புதமாகப் பந்துவீசினார் அஸ்வின். 22-வது ஓவரை அஸ்வின் வீசியபோது, புகோவ்ஸ்கி வழங்கிய எளிதான கேட்சை நழுவவிட்டார் ரிஷப் பந்த். இதனால் அஸ்வின் கோபமடைந்தார்.

அடுத்ததாக சிராஜ் வீசிய பவுன்சர் பந்திலும் ரிஷப் பந்திடம் கேட்ச் கொடுத்தார் புகோவ்ஸ்கி. எனினும் கடினமான அந்த கேட்சையும் நழுவவிட்டார் ரிஷப் பந்த். மூன்றாம் நடுவர் கவனித்து அவுட் இல்லை என அறிவித்தார். 

ஆஸ்திரேலிய அணி 27 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 59 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. புகோவ்ஸ்கி 34, லபுசான் 20 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.