இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

நிகர்நிலை பல்கலைக்கழகங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டி: கலசலிங்கம் மாணவர்கள் வெற்றி

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய நிகர்நிலை பல்கலைக்கழகங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியில் கலசலிங்கம்

News image
Updated On :5 மார்ச் 2015, 9:50 am

கோ.ஜெயக்குமார்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய நிகர்நிலை பல்கலைக்கழகங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியில் கலசலிங்கம் பல்கலைக்கழக மாணவர்கள் வெற்றி பெற்றனர்.

போட்டிகள் சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கலசலிங்கம் பல்கலைக்கழகத்ததின் இ.இ.இ. 4-ம் ஆண்டு மாணவர் ஏ.எஸ்.ஆபினஷ்குமரன் 400 மீட்டர் ஓட்டத்தில் மூன்றாம் இடம் பெற்றார். இயந்திரவியல் துறையின் பி.ஆர்.பிரதீஷ் 110 மீட்டர் தடை தாண்டும் போட்டியில் மூன்றாம் இடம் பெற்றார். இந்த மாணவர்களுக்கு தலா ரூ.1000 ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.மேலும் விருதுநகரில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்திய முதலவர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியில் 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப் போட்டியில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தின் பி.ஆர்.பிரதீஷ் முதலிடம் பெற்று, ரூ.1000 ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ் பெற்றார்.

இவர்களை வியாழக்கிழமை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் எஸ்.சரவணசங்கர், சிவில் துறை தலைவர் முத்துக்கண்ணன், உதவிப் பேராசிரியர் சசீந்திரன், உடற்கல்வி ஆசிரியர் விஜயலட்சுமி உள்ளிட்டோர் பாராட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.