இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஐபிஎல்லில் கலந்து கொள்ளும் தில்லி கேபிடல்ஸ் அணி வீரர்கள் துபாய்க்கு வருகை

இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் இடம்பெற்ற தில்லி கேபிடல்ஸ் அணி வீரர்கள் ஐபிஎல்லில் கலந்து கொள்வதற்காக இன்று துபாய்க்கு வந்துள்ளனர்.

News image
கோப்புப்படம்
Updated On :12 செப்டம்பர் 2021, 7:49 am

DIN

இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் இடம்பெற்ற தில்லி கேபிடல்ஸ் அணி வீரர்கள் ஐபிஎல்லில் கலந்து கொள்வதற்காக இன்று துபாய்க்கு (ஞாயிற்றுக்கிழமை) வந்துள்ளனர். துபாய்க்கு வந்திறங்கிய ரிஷப் பந்த், ரவிசந்திரன் அஸ்வின், ரஹானே, இஷாந்த் சர்மா, அக்சர் படேல், பிரித்வி ஷா, உமேஷ் யாதவ் ஆகிய வீரர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

இதையடுத்து, ஆறு நாள்கள் தனிமைப்படுத்தலுக்கு பிறகு பயோ பபுலில் உள்ள மற்ற அணி வீரர்களுடன் இவர்கள் இணைவார்கள் என தில்லி கேபிடல்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அணியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் இடம்பெற்ற தில்லி கேபிடல்ஸ் அணி வீரர்கள், இரண்டாம் கட்ட ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக இன்று துபாய்க்கு பாதுகாப்பாக வந்து சேர்ந்துள்ளனர்.

ரிஷப் பந்த், ரவிசந்திரன் அஸ்வின், ரஹானே, இஷாந்த் சர்மா, அக்சர் படேல், பிரித்வி ஷா, உமேஷ் யாதவ் ஆகிய வீரர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பயோ பபுலில் உள்ள மற்ற அணி வீரர்களுடன் இணைவதற்கு முன்பு மூன்று முறை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. ஆறு நாள்கள் தனிமைப்படுத்தலில் இருக்க போகின்றனர்" எனக் குறிப்பிட்டுள்ளது.

ஏப்ரல், மே மாதம் நடைபெற்ற ஐபிஎல் முதல் கட்ட போட்டிகளில், எட்டு போட்டிகளில் ஆறில் வெற்றி பெற்று புள்ளிகள் அட்டவணையில் தில்லி கேபிடல்ஸ் அணி முதலிடத்தில் உள்ளது. முன்னதாக, இந்திய, இங்கிலாந்து அணிககளுக்கிடையேயான ஐந்தாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி கரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.