ஒருநாள் போட்டி: ஷ்ரேயஸ் ஐயர் 1000 ரன்களை கடந்தார்
ஒருநாள் போட்டிகளில் இந்திய வீரர் ஷ்ரேயஸ் ஐயர் 25 இன்னிங்ஸில் 1000 ரன்களை கடந்து சாதனைப் படைத்துள்ளார்.


ஒருநாள் போட்டிகளில் இந்திய வீரர் ஷ்ரேயஸ் ஐயர் 25 இன்னிங்ஸில் 1000 ரன்களை கடந்து சாதனைப் படைத்துள்ளார்.
மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான நேற்றைய (ஜூலை 22) முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 308 ரன்களை அடித்து பிறகு 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இதில் ஷ்ரேயஸ் ஐயர் 54 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதன் மூலம் இவர் ஒருநாள் போட்டிகளில் 1000 ரன்களை கடந்துள்ளார்.
இதற்குமுன் 1000 ரன்களை 24 இன்னிங்ஸில் விராட் கோலி, ஷிகர் தவான் கடந்துள்ளனர். அவர்களுக்கு அடுத்து நவஜோத் சிங் சித்து மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோர் 25 இன்னிங்ஸில் இந்த சாதனையைப் படைத்த இந்திய வீரர்களாக உள்ளனர்.
28 ஒருநாள் போட்டிகளில் 25 இன்னிங்ஸில் பேட்டிங் விளையாடி 1001 ரன்களை எடுத்துள்ள ஷ்ரேயஸ் ஐயரின் சராசரி 41.70 ஆகும். இதில் 1 சதம், 10 அரைசதங்களும் அடங்கும். அதிகபட்ச ஸ்கோர் 103.
இரண்டாவது ஒருநாள் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...