இன்று ஆடிப் பெருக்கு: ஆறுகள் வறண்டுள்ளதால் பொதுமக்கள் ஏமாற்றம்இடைத்தோ்தலுக்காகக் காத்திருக்கிறேன்: சீமான்ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல்கள் விரைவில் நிறுத்தம்: டிரம்ப்6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு
/

சொந்த மண்ணில் கடைசி சர்வதேசப் போட்டியில் விளையாடிய டேவிட் வார்னர்!

நான் எனது கிரிக்கெட் பயணத்தை நன்றாக நிறைவு செய்துவிட்டதாக நினைக்கிறேன். அணியில் இளம் வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்துவதற்கான நேரம் வந்துவிட்டது.

News image

கோப்புப்படம்

Updated On :13 பிப்ரவரி 2024, 9:25 pm IST

ஆஸ்திரேலிய மண்ணில் டேவிட் வார்னர் தனது கடைசி சர்வதேசப் போட்டியில் விளையாடினார்.

ஆஸ்திரேலிய அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான டேவிட் வார்னர் அண்மையில் சர்வதேச கிரிக்கெட்டில் தனது ஓய்வு முடிவை அறிவித்தார். சர்வதேச டி20 போட்டிகள் மற்றும் டி20 லீக் போட்டிகளை தவிர்த்து ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அவர் ஓய்வு பெற்றார்.

ஆஸ்திரேலிய அணி மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான கடைசி மற்றும் 3-வது டி20 போட்டியில் இன்று விளையாடியது. இந்தப் போட்டியில் டேவிட் வார்னர் 81 ரன்கள் எடுத்தார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடர் நிறைவடைந்த நிலையில், அடுத்து நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்காக ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இந்தத் தொடரில் டேவிட் வார்னர் விளையாடுவார். அதன்பின் உலகக் கோப்பை டி20 தொடரில் வார்னர் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், சொந்த மண்ணில் தனது கடைசிப் போட்டியில் வார்னர் இன்று (பிப்ரவரி 13) விளையாடினார்.

போட்டி நிறைவடைந்த பிறகு வார்னர் பேசியதாவது: நான் எனது கிரிக்கெட் பயணத்தை நன்றாக நிறைவு செய்துவிட்டதாக நினைக்கிறேன். அணியில் இளம் வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்துவதற்கான நேரம் வந்துவிட்டது. கிரிக்கெட்டிலிருந்து சிறிது ஓய்வெடுப்பது என்பது நல்லது. நியூசிலாந்துக்கு எதிரான தொடருக்குப் பிறகு எனக்கு நிறைய நேரம் இருக்கிறது. நான் டி20உலகக் கோப்பைத் தொடரில் விளையாட விரும்புகிறேன் என ஏற்கனவே கூறியிருந்தேன். உலகக் கோப்பைக்குப் பிறகு சர்வதேசப் போட்டியிலிருந்து விடை பெறுவேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.