இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான பயிற்சியாளரை நியமித்த நியூசிலாந்து!

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக நியூசிலாந்து அணி அந்த அணியின் முன்னாள் வீரரை பயிற்சியாளராக நியமித்துள்ளது.
ஜாகோப் ஓரம்
ஜாகோப் ஓரம்படம் | நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
Published on
Updated on
1 min read

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக நியூசிலாந்து அணி அந்த அணியின் முன்னாள் வீரரை பயிற்சியாளராக நியமித்துள்ளது.

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் வருகிற அக்டோபர் 16 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

ஜாகோப் ஓரம்
கே.எல்.ராகுல் எல்எஸ்ஜியின் ஒரு அங்கம்! லக்னௌ அணியின் உரிமையாளர் புகழாரம்!

இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக நியூசிலாந்து அணி அந்த அணியின் முன்னாள் வீரர் ஜாகோப் ஓரமை டெஸ்ட் அணிக்கான பந்துவீச்சு பயிற்சியாளராக நியமித்துள்ளது.

வலதுகை வேகப் பந்துவீச்சாளரான ஜாகோப் ஓரம் அக்டோபர் 7 ஆம் தேதி முதல் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக பொறுப்பேற்கவுள்ளார். மூன்று 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் 4 டி20 உலகக் கோப்பைத் தொடர்களில் விளையாடியுள்ள ஜாகோப் ஓரமின் பரந்த அனுபவம் நியூசிலாந்து அணிக்கு வலுசேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதற்கு இரு அணிகளுக்கும் முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com