அமோனியா வாயு கசிவு: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு!தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்கும் டெண்டர் ரத்து! மதிமுக உயர் நிலைக் குழு கூட்டம்! சீர்காழி எம்.எல்.ஏ. ஆப்சென்ட்!கீர்த்தனா பெயர் ஏன் முதலில்? அமைச்சர் ஜெகதீஸ்வரி கேள்விஸ்போர்ட்ஸ எடு, டிரக்ஸ விடு! இளைஞர்களுக்கு முதல்வர் விஜய் அறிவுரை!
/

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான பயிற்சியாளரை நியமித்த நியூசிலாந்து!

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக நியூசிலாந்து அணி அந்த அணியின் முன்னாள் வீரரை பயிற்சியாளராக நியமித்துள்ளது.

News image

ஜாகோப் ஓரம் - படம் | நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)

Updated On :29 ஆகஸ்ட் 2024, 4:20 pm IST

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக நியூசிலாந்து அணி அந்த அணியின் முன்னாள் வீரரை பயிற்சியாளராக நியமித்துள்ளது.

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் வருகிற அக்டோபர் 16 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக நியூசிலாந்து அணி அந்த அணியின் முன்னாள் வீரர் ஜாகோப் ஓரமை டெஸ்ட் அணிக்கான பந்துவீச்சு பயிற்சியாளராக நியமித்துள்ளது.

வலதுகை வேகப் பந்துவீச்சாளரான ஜாகோப் ஓரம் அக்டோபர் 7 ஆம் தேதி முதல் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக பொறுப்பேற்கவுள்ளார். மூன்று 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் 4 டி20 உலகக் கோப்பைத் தொடர்களில் விளையாடியுள்ள ஜாகோப் ஓரமின் பரந்த அனுபவம் நியூசிலாந்து அணிக்கு வலுசேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதற்கு இரு அணிகளுக்கும் முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.