பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

தாயின் அறிவுரையால் சுழல் பந்துவீச்சாளராக மாறிய அஸ்வின்..!

நேர்காணல் ஒன்றில் அஸ்வின் தனது சுழல் பந்து வீச்சுக்கான காரணம் குறித்து பேசியுள்ளார்.

News image

ரவிச்சந்திரன் அஸ்வின் - கோப்புப் படம்

Updated On :26 டிசம்பர் 2024, 12:20 pm IST

ஓய்வை அறிவித்த பிறகு அஸ்வின் யூடியூப் நேர்காணல் ஒன்றில் பங்கேற்று பேசியுள்ளார். அதில் தனது சுழல்பந்து வீச்சுகு காரணம் அவரது அம்மா எனக் கூறியுள்ளார்.

அதில் அஸ்வின் பேசியதாவது:

நானும் அப்பாவும் உழைக்க அம்மாதான் மூலக் காரணம். அவர் பெட்ரோல் மாதிரி. அவர் இல்லையென்றால் எங்களால் இவ்வளவு ஓடியிருக்க முடியாது. ஒருநாள் எனது போட்டியைப் பார்க்க வந்தார். நான் குறைவான ரன்களில் ஆட்டமிழந்தேன். அப்போது அம்மா, “என்னடா சும்மாவே இருக்க?” எனக் கேட்டார். “அவுட் ஆயிட்டேன் என்ன பண்றது?” என்றேன். அதற்கு அம்மா, “பௌலிங் போடு” என்றார். நான் “பாஸ்ட் பௌலிங் வராது” என்றேன். அதற்கு அம்மா, “சரி ஸ்பின் போடு” என்றார். அப்போது தொடங்கியதுதான் எனது சுழல் பந்துவீச்சுப் பயணம்.

பிறகு இன்னுமொரு முறை என்னால் சரியாக விளையாட முடியவில்லை, உங்களை ஏமாற்றிவிட்டேன் என அம்மாவின் மடியில் படுத்து அழுதேன். அப்போது அம்மா உன்னால் முடிந்தவரை முயற்சி செய். நான் உனக்காக பணம் சேமித்து வைக்கிறேன் எனக் கூறினார். எனது அம்மாவும் அப்பாவும் எனக்காக தியாகம் செய்தார்கள். அவர்கள் இல்லையென்றால் நான் இல்லை என அஸ்வின் கூறினார்.

38 வயதாகும் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக பிரிஸ்பேன் டெஸ்ட்டின் 5ஆம் நாளில் தெரிவித்தார்.

இதுவரை டெஸ்ட்டில் மட்டும் 537 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பெர்த் டெஸ்ட்டில் தேர்வு செய்யாததால் ஓய்வு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

முன்னாள் இந்திய வீரர்கள் சச்சின், கபில் தேவ் உள்பட பலரும் அஸ்வினுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

2025 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் அஸ்வின் விளையாடவிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.