சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

தாயின் அறிவுரையால் சுழல் பந்துவீச்சாளராக மாறிய அஸ்வின்..!

நேர்காணல் ஒன்றில் அஸ்வின் தனது சுழல் பந்து வீச்சுக்கான காரணம் குறித்து பேசியுள்ளார்.

News image

ரவிச்சந்திரன் அஸ்வின் - கோப்புப் படம்

Updated On :26 டிசம்பர் 2024, 12:18 pm IST

ஓய்வை அறிவித்த பிறகு அஸ்வின் யூடியூப் நேர்காணல் ஒன்றில் பங்கேற்று பேசியுள்ளார். அதில் தனது சுழல்பந்து வீச்சுகு காரணம் அவரது அம்மா எனக் கூறியுள்ளார்.

அதில் அஸ்வின் பேசியதாவது:

நானும் அப்பாவும் உழைக்க அம்மாதான் மூலக் காரணம். அவர் பெட்ரோல் மாதிரி. அவர் இல்லையென்றால் எங்களால் இவ்வளவு ஓடியிருக்க முடியாது. ஒருநாள் எனது போட்டியைப் பார்க்க வந்தார். நான் குறைவான ரன்களில் ஆட்டமிழந்தேன். அப்போது அம்மா, “என்னடா சும்மாவே இருக்க?” எனக் கேட்டார். “அவுட் ஆயிட்டேன் என்ன பண்றது?” என்றேன். அதற்கு அம்மா, “பௌலிங் போடு” என்றார். நான் “பாஸ்ட் பௌலிங் வராது” என்றேன். அதற்கு அம்மா, “சரி ஸ்பின் போடு” என்றார். அப்போது தொடங்கியதுதான் எனது சுழல் பந்துவீச்சுப் பயணம்.

பிறகு இன்னுமொரு முறை என்னால் சரியாக விளையாட முடியவில்லை, உங்களை ஏமாற்றிவிட்டேன் என அம்மாவின் மடியில் படுத்து அழுதேன். அப்போது அம்மா உன்னால் முடிந்தவரை முயற்சி செய். நான் உனக்காக பணம் சேமித்து வைக்கிறேன் எனக் கூறினார். எனது அம்மாவும் அப்பாவும் எனக்காக தியாகம் செய்தார்கள். அவர்கள் இல்லையென்றால் நான் இல்லை என அஸ்வின் கூறினார்.

38 வயதாகும் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக பிரிஸ்பேன் டெஸ்ட்டின் 5ஆம் நாளில் தெரிவித்தார்.

இதுவரை டெஸ்ட்டில் மட்டும் 537 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பெர்த் டெஸ்ட்டில் தேர்வு செய்யாததால் ஓய்வு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

முன்னாள் இந்திய வீரர்கள் சச்சின், கபில் தேவ் உள்பட பலரும் அஸ்வினுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

2025 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் அஸ்வின் விளையாடவிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.