அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!புதுச்சேரியில் காற்றில் பறக்க விடப்பட்ட பேனர் தடை சட்டம்! என்ன சொல்கிறார்கள் மக்கள்?வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!போலி பத்திரப்பதிவுகள் குறித்து மக்கள் புகாரளிக்கலாம்: அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் எப்போது? அமைச்சர் மரிய வில்சன் தகவல்
/

இங்கிலாந்து அணிக்கு பயிற்சியாளராகும் ஜேம்ஸ் ஆண்டர்சன்!

இங்கிலாந்து அணிக்கு பயிற்சியாளராகும் ஜேம்ஸ் ஆண்டர்சன்!

News image

ஜேம்ஸ் ஆண்டர்சன் - படம் | இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)

Updated On :17 ஜூலை 2024, 2:57 pm IST

டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வை அறிவித்த ஆண்டர்சன் தற்போது இங்கிலாந்து அணிக்கு பயிற்சியாளராக செயல்படவிருக்கிறார்.

முதல் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை இன்னிங்ஸ் மற்றும் 114 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் 4 விக்கெட்டுகள் எடுத்து 704 விக்கெட்டுகளுடன் ஓய்வை பெற்றார் பிரபல இங்கிலாந்து வேகப் பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன். 188 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஆண்டர்சன் 41 வயதிலும் நல்ல உடல்நிலையுடன் இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 700க்கும் அதிகமான விக்கெட்டுகள் வீழ்த்திய மூன்றாவது வீரர் , முதக் வேகப் பந்து வீச்சாளர் என்ற பெருமை ஆண்டர்சனையே சேரும். முதல் இரண்டு இடங்களில் இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரனும், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ஷேன் வார்னேவும் உள்ளனர்.

இந்நிலையில் மே.இ.தீவுகள் உடனான மீதமிருக்கும் 2 டெஸ்ட் போட்டிகளுக்கு ஆண்டர்சன் பௌலிங் ஆலோசகராக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.