
கே.எல்.ராகுல் ஆட்டமிழப்பில் சர்ச்சை..! நடுவரை சாடும் இந்தியர்கள்!
ஆஸி.க்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இந்தியாவின் தொடக்க வீரர் கே.எல்.ராகுல் ஆட்டமிழப்பு குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.

கே.எல்.ராகுல் ஆட்டமிழப்பில் சர்ச்சை. - படங்கள்: எக்ஸ் / 7கிரிக்கெட்
ஆஸி.க்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இந்தியாவின் தொடக்க வீரர் கே.எல்.ராகுல் ஆட்டமிழப்பு குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.
பெர்த் மைதானத்தில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டி இன்று காலை தொடங்கியது. கேப்டன் ரோஹித் சர்மா முதல் போட்டியில் பங்கேற்காத நிலையில், பும்ரா தலைமையில் இந்திய அணி களமிறங்கியுள்ளது.
இந்தியாவின் டாப் ஆர்டர் பேட்டர்கள் வரிசையாக அவுட்டாகியுள்ளனர்.
தற்போது, 37 ஓவர்களில் 93/6 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது இந்திய அணி.
இதில் சிறப்பாக விளையாடிவந்த கே.எல்.ராகுல் ஆட்டமிழந்தது நடுவரின் தவறான முடிவென இந்திய ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
22.2 ஆவது ஓவரில் மிட்செல் ஸ்டார்க் வீசிய பந்தில் கே.எல்.ராகுல் (74 பந்தில் 24 ரன்கள்) கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழப்பார். கள நடுவர் அவுட் கொடுக்காமல் டிஆர்எஸ் எடுத்து மூன்றாம் நடுவர் கொடுத்த விக்கெட். இதில் ராகுல் பேட்டில் பந்து படவில்லை, காலுறையில் பேட் படும் சப்தம்தான் அது என ரசிகர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.
ஹைடன், “பேட்டை பந்து கடக்கும்போது பேட்டுடன் (Bat) காலில் கட்டப்பட்டுள்ள பேட் (pad)தொடவில்லை. அதனால் அது நிச்சயமாக பேட்டில்தான் (bat) பட்டிருக்கும்” என்றார்.
முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா, “இது என்ன மாதிரியான முடிவு? இது நகைச்சுவை அல்ல” எனக் கோபமாக கூறியுள்ளார்.
"His pad and bat are not together at that point in time as the ball passes.
— 7Cricket (@7Cricket) November 22, 2024
"It's (bat hitting pad) after, in fact, the ball passes the edge. Does Snicko pick up the sound of the bat hitting the pad?
"We're assuming (Snicko) may be the outside edge of the bat but that may not⦠pic.twitter.com/hvG0AF9rdo
What the F@&* is this decision???? This is a joke! #BGT2025
— Robbie Uthappa (@robbieuthappa) November 22, 2024
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





