நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்! பாஜக மட்டும் எதிர்ப்பு!கர்நாடகத்துடன் முதல்வர் விஜய் பேச்சுவார்த்தை நடத்துவது நல்லதல்ல! ஓபிஎஸ் பேச்சுமுதல்வர் தலைமையில் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழியை ஏற்ற மாணவர்கள்!சென்னையில் இன்று முதல் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி முகாம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2400 உயர்வுதமிழ் மீதான தாக்குதல்.. அமைச்சர் மரிய வில்சன் மன்னிப்புக் கேட்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்எம்.எட். சோ்க்கை: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்!
/

டெஸ்ட் போட்டிகளில் வங்கதேச அணிக்காக 6000 ரன்களை கடந்த முதல் வீரர்!

வங்கதேச அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 6000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையை முஷ்ஃபிகர் ரஹிம் படைத்துள்ளார்.

News image

படம் | வங்கதேச கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)

Updated On :22 அக்டோபர் 2024, 9:35 pm IST

வங்கதேச அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 6000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையை முஷ்ஃபிகர் ரஹிம் படைத்துள்ளார்.

வங்கதேசம் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டாக்காவில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 106 ரன்களுக்கும், தென்னாப்பிரிக்க அணி 308 ரன்களுக்கும் ஆட்டமிழந்தது.

6000 ரன்கள் குவித்த முதல் வீரர்

வங்கதேச அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. வங்கதேசம் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை இழந்து 101 ரன்கள் எடுத்துள்ளது. மஹ்மதுல் ஹாசன் ஜாய் 38 ரன்களுடனும், முஷ்ஃபிகர் ரஹிம் 31 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

முஷ்ஃபிகர் ரஹிம் (கோப்புப் படம்)

முஷ்ஃபிகர் ரஹிம் (கோப்புப் படம்)

இரண்டாவது இன்னிங்ஸில் 31 ரன்கள் எடுத்துள்ளதன் மூலம், வங்கதேச அணியின் மூத்த வீரர் முஷ்ஃபிகர் ரஹிம் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் வங்கதேச அணிக்காக 6000 ரன்களைக் கடந்த வீரர் முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

வங்கதேச அணிக்காக இதுவரை 93 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள முஷ்ஃபிகர் ரஹிம் 6,003 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 11 சதங்கள், 3 இரட்டை சதங்கள் மற்றும் 27 அரைசதங்கள் அடங்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.