மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டிக்கான பெண் நடுவர்கள் குழு செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.
மகளிர் டி20 உலகக்கோப்பை போட்டிகள் ஐக்கிய அமீரகத்தின் துபை மற்றும் ஷார்ஜாவில் வருகிற அக்டோபர் மாதம் 3-ஆம் தேதி தொடங்க இருக்கின்றன. இந்தப் போட்டிகள் அக்டோபர் 20 வரை நடைபெற இருக்கின்றது. மேலும், துபை மற்றும் ஷார்ஜா மைதானங்கள் மொத்தமாக 23 போட்டிகளை நடத்த இருக்கின்றன.
9-வது டி20 உலகக் கோப்பைக்கான மகளிர் அதிகாரிகள் குழுவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் 10 நடுவர்கள் உள்பட 13 பேர் இடம்பெற்றுள்ளனர். அதிகாரிகள் குழுவில் அனைவரும் பெண்களாக இடம்பெற்றிருப்பது கிரிக்கெட்டில் பெண்களுக்கான பங்களிப்பை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக என சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிப்பட்டுள்ள பெண் நடுவர்களும் அதிக அனுபவம் வாய்ந்தவர்களாகவுள்ளனர். கிளேர் போலோசாக் 5-வது கோப்பையில் விளையாடிய அனுபவம் வாய்ந்தவர். கிம் காட்டன் மற்றும் ஜாக்குலின் வில்லியம்ஸ் 4-வது உலகக் கோப்பையில் விளையாடியவர்கள்.
2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் டிவி நடுவராக பணியாற்றிய சூ ரெட்ஃபெர்னும் 4-வது உலகக் கோப்பையில் விளையாடிய அனுபவமிக்கவர். அவருடன் 2-வது உலகக் கோப்பையில் விளையாடிய ஷான்ட்ரே ஃபிரிட்ஸ் மற்றும் மைகேல் பெரேரா இருவரும் இணைந்து பணியாற்றவுள்ளனர்.
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான அதிகாரிகள்
ஐக்கிய அமீரக ஐசிசி எலைட் பேனல் கள நடுவர்கள்: ஷான்ட்ரே ஃபிரிட்ஸ், ஜி.எஸ்.லக்ஷ்மி, மைக்கேல் பெரேரா.
ஐக்கிய அமீரக ஐசிசி எலைட் பேனல் நடுவர்கள்: லாரன் ஏஜென்பேக், கிம் காட்டன், சாரா டம்பனேவானா, அன்னா ஹாரிஸ், நிமாலி பெரேரா, கிளாரி போலோசாக், விருந்தா ரதி, சூ ரெட்ஃபெர்ன், எலோயிஸ் ஷெரிடன், ஜாக்குலின் வில்லியம்ஸ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஃபிஃபா ஆடவர் உலகக் கோப்பை வரலாற்றில் மீண்டும் பெண் நடுவர்கள்!

மகளிர் டி20 உலகக் கோப்பை: வங்கதேசத்தை 77 ரன்களுக்குக் கட்டுப்படுத்திய ஆஸி.!

891 புதிய வீரர்களுடன் முதல்முறையாக 1,248 பேர் பங்கேற்கும் கால்பந்து உலகக் கோப்பை!
மகளிர் டி20 உலகக் கோப்பை: நடுவர்கள் குழுவில் தமிழ்ப் பெண் உள்பட 4 இந்தியர்களுக்கு வாய்ப்பு!
விடியோக்கள்

சினிமா Shooting-தான் இது! முதல்வரின் பேச்சை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர்! | Udhayanidhi Stalin

”மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விடமாட்டோம்!” பேரவையில் முதல்வர் விஜய் பேச்சு! | TVK

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46




