இந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

பிசிசிஐ ஒப்பந்தம்: ரோஹித், கோலிக்கு ஏ+, ஷ்ரேயாஸ் உள்ளே, இஷான் வெளியே?

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான பிசிசிஐ ஒப்பந்தம் குறித்து...

News image

இந்திய வீரர்கள். - படம்: பிசிசிஐ

Updated On :1 ஏப்ரல் 2025, 2:29 pm IST

டி20 கிரிக்கெட்டில் ஓய்வுபெற்ற இந்தியாவின் நட்சத்திர வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி ரூ.7 கோடி மதிப்புள்ள தங்களது ஏ+ ஒப்பந்த தரத்தை மீண்டும் தக்கவைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2024-25ஆம் ஆண்டுக்கான பிசிசிஐ ஒப்பந்தத்தில் இல்லாத ஷ்ரேயாஸ் ஐயர் சாம்பியன்ஸ் டிராபியில் சிறப்பாக செயல்பட்டார். அதில் கடைசியில் சேர்க்கப்பட்ட வருண் சக்கரவர்த்தியும் அசத்தலாக விளையாடினார்.

புதியவர்களுக்கு வாய்ப்பு?

வருண் சக்கரவர்த்தி, நிதீஷ் ரெட்டி, அபிஷேக் சர்மா கடந்த 12 மாதங்களாக சிறப்பாக விளையாடியுள்ளதால் அவர்களுக்கு முதல்முறையாக பிசிசிஐ ஒப்பந்தம் கிடைக்குமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து ஐஏஎன்எஸுக்கு கிடைத்த தகவலின்படி:

ஏ+ தரத்தில் கோலி, ரோஹித்

ஓய்வு பெற்றாலும் ரோஹித், கோலி ஏ+ தரத்திலான ஒப்பந்தத்தில் நீடிக்கிறார்கள். சாம்பியன்ஸ் டிராபியில் அதிக ரன்கள் குவித்த ஷ்ரேயாஸ் ஐயருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மத்திய ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்ட இஷான் கிஷன் மீண்டும் தேர்வாகவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.

டி 20 உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபியில் அசத்திய அக்‌ஷர் படேலுக்கு கூடுதல் மதிப்புள்ள ஒப்பந்தம் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

அறிவிப்பு எப்போது?

கடந்த வாரம் மகளிர் அணிக்கான தக்கவைப்பு பட்டியலை பிசிசிஐ வெளியிட்டது.

தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர், பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா ஆடவர் அணிக்கான ஒப்பந்தம் குறித்து சனிக்கிழமை குவஹாட்டியில் கலந்தாலோசிக்க இருந்தது தள்ளிவைக்கப்பட்டதாக ஐஏஎன்எஸ் மூலம் தகவல் அளிக்கப்பட்டது.

ஐபிஎல் முடிந்து 5 போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்துடன் ஜூன்20 முதல் இந்தியா விளையாடவிருக்கிறது. கடைசியாக டெஸ்ட்டில் இங்கிலாந்தில் 2007இல் வென்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.