மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இந்தியா - இங்கிலாந்து கடைசி டெஸ்ட்டை நேரில் கண்டுகளிக்கும் ரோஹித் சர்மா!

இந்தியா - இங்கிலாந்து இடையேயான கடைசி டெஸ்ட் போட்டியை ரோஹித் சர்மா நேரில் கண்டுகளித்து வருகிறார்.

News image
ரோஹித் சர்மா- படம் | பிசிசிஐ
Updated On :2 ஆகஸ்ட் 2025, 4:19 pm

இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா - இங்கிலாந்து இடையேயான கடைசி டெஸ்ட் போட்டியை ரோஹித் சர்மா நேரில் கண்டுகளித்து வருகிறார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஓவலில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 224 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 247 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

ஆட்டத்தின் மூன்றாம் நாளான இன்று (ஆகஸ்ட் 2) இந்திய அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதம் விளாசி அசத்தினார். அவர் 118 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆகாஷ் தீப் 66 ரன்கள் எடுத்து அசத்தினார்.

இந்திய அணி 330 ரன்களுக்கும் அதிகமாக முன்னிலை பெற்று விளையாடி வருகிறது. ரவீந்திர ஜடேஜா அரைசதம் கடந்து விளையாடி வருகிறார்.

ஓவலில் ரோஹித் சர்மா

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டியைக் காண டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா நேரில் வந்தது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா - இங்கிலாந்து இடையேயான கடைசிப் போட்டியை ரோஹித் சர்மா நேரில் கண்டுகளிக்கும் புகைப்படங்களை பிசிசிஐ அதன் எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் அண்மையில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.

summary

Rohit Sharma is watching the final Test match between India and England in person.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.