தில்லியில் சிஜேபியின் போராட்டத்தில் பங்கேற்கத் தயார்! - மமதா பானர்ஜிசென்னையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம்! நீட் தேர்வு அறவே கூடாது என்பதுதான் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு: தவெக!தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் சோனம் வாங்சுக்!பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!
/

எல்லீஸ் பெர்ரி விளாசல்: மும்பை அணிக்கு 168 ரன்கள் இலக்கு!

மும்பை அணிக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

News image

எல்லீஸ் பெர்ரி...

Updated On :21 பிப்ரவரி 2025, 9:54 pm IST

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது.

3-வது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்டில் முதல் கட்ட ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் பெங்களூருவில் இன்று(பிப்.21) தொடங்கின. 7-வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் மற்றும் நடப்பு சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸுடன் மோதியது.

டாஸ் வென்ற கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய பெங்களூரு கேப்டன் மந்தனா அதிரடியாக விளையாடி 26 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அவருக்குப் பின்னர் வந்த எல்லீஸ் பெர்ரி பொறுப்புடன் விளையாடி ஒருபுறம் ரன் குவிக்க மற்றொரு புறம் விக்கெட்டுகள் மளமளவென சரியத் தொடங்கின.

இருந்தாலும் நங்கூரம் பாய்ச்சியது போல் தனது பாணியில் ஆட்டத்தைக் காட்டிய எல்லீஸ் பெர்ரி 43 பந்துகளில் 81 ரன்கள் குவித்து வெளியேறினார். அதில் 11 பவுண்டரிகளும் 2 சிக்ஸர்களும் அடங்கும். அவரைத் தவிர்த்து விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் 28 ரன்கள் விளாசினார்.

மும்பை அணித் தரப்பில் அமன்ஜோத் கௌர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பெங்களூரு அணி 7 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் குவித்தது. இதன்மூலம் மும்பை அணிக்கு 168 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முதலிரண்டு போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றிபெற்ற பெங்களூரு அணி இந்தப் போட்டியிலும் வென்று ஹாட்ரிக் வெற்றிபெறுமா? என்ற எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.