வெற்றிக்காகப் பேரணி நடத்துவதில் எனக்கு நம்பிக்கை இல்லை என இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கூறியுள்ளார்.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இங்கிலாந்து செல்வதற்கு முன்னதாக மும்பையில் உள்ள பிசிசிஐ-யில் தலைமை அலுவலகத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீரும், இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் இருவரும் இன்று(ஜூன் 6) செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் ஐபிஎல் வெற்றி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி சின்னசாமி மைதானம் அருகே 11 ரசிகர்கள் உயிரிழந்தது குறித்து கம்பீரிடம் கேள்வியெழுப்பப்பட்டது.
செய்தியாளர்களிடம் கௌதம் கம்பீர் பேசுகையில், “விளையாட்டில் வெற்றிப் பெற்றதற்கு பேரணி நடத்துவது அவசியமானதல்ல. குடிமக்கள் அனைவரும் பொறுப்பானவர்களாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லையெனில், இதுபோன்ற விழாக்களை நடத்தக் கூடாது. வெற்றிக்காக பேரணி நடத்துவதில் எனக்கு நம்பிக்கை இல்லை” என்றார்.
இதையும் படிக்க: கூட்ட நெரிசல் விவகாரம்: ஆர்சிபி அணி மீது வழக்குப் பதிவு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

17 சராசரியுடன் விளையாடும் சூர்யகுமார் யாதவ்..! இந்திய டி20 அணியில் இருந்து நீக்கப்படுவாரா?

இந்திய அணியில் இடம் பிடித்த 7 ஜிடி வீரர்கள்..! மும்பையிலிருந்து குஜராத்துக்கு மாறிய லாபி?

நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசு வெற்றி! பேரவை நிகழ்வுகள் - முழுவிவரம்

நம்பிக்கை வாக்கெடுப்பு: பாமக ஆதரவும் இல்லை, எதிர்ப்பும் இல்லை!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



