மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் மாற்றம் செய்யபட்டுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நிறைவடைந்த நிலையில், ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் வருகிற ஜூன் 25 முதல் தொடங்கவுள்ளது.
இந்த டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் மாற்றம் செய்யப்பட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. காயம் காரணமாக பிரண்டன் டாக்கெட்டுக்குப் பதிலாக அணியில் சீன் அப்பாட் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரிலும் பிரண்டான் டாக்கெட் அணியில் இடம்பெற்றிருந்தார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான ரிசர்வ் வீரராக அணியில் இடம்பெற்றிருந்த அவர், காயம் காரணமாக மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிய சீன் அப்பாட், பிரண்டான் டாக்கெட்டுக்குப் பதிலாக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
JUST IN: Sean Abbott has been added to Australia's Test squad for the three-Test series against West Indies.
— cricket.com.au (@cricketcomau) June 15, 2025
Details: https://t.co/JiZBokTTIK pic.twitter.com/8fqRlG5CgM
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி விவரம்
பாட் கம்மின்ஸ் (கேப்டன்), சீன் அப்பாட், ஸ்காட் போலாண்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஷ், உஸ்மான் கவாஜா, சாம் கான்ஸ்டாஸ், மாட் குன்ஹிமேன், மார்னஸ் லபுஷேன், நாதன் லயன், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், பியூ வெப்ஸ்டர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









