சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அனுபவமற்ற இந்திய அணி இங்கிலாந்தில் தடுமாறும்: முன்னாள் வீரர்கள்

இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணி இங்கிலாந்தில் தடுமாறும் என முன்னாள் வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

News image
- படம் | AP
Updated On :20 ஜூன் 2025, 11:55 am

DIN

இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணி இங்கிலாந்தில் தடுமாறும் என முன்னாள் வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி இங்கிலாந்து சென்றடைந்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் இன்று (ஜூன் 20) தொடங்கியது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

இந்திய அணி தடுமாறும்

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியுள்ள நிலையில், அனுபவம் மிகுந்த வீரர்கள் இல்லாமல் இங்கிலாந்தை எதிர்கொள்ளும் இந்திய அணி தடுமாறப் போகிறது என முன்னாள் வீரர்களான மேத்யூ ஹைடன் மற்றும் கிரீம் ஸ்மித் இருவரும் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ஐசிசி ரிவ்யூவில் மேத்யூ ஹைடன் பேசியதாவது: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி தடுமாற்றத்தை சந்திக்கப் போவதாக உணர்கிறேன். இங்கிலாந்தின் சூழல் இளம் கேப்டன் ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணிக்கு மிகவும் புதிதாக இருக்கும். இந்த தொடர் இந்திய அணிக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கப் போகிறது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் இந்திய அணிக்கு வைக்கப்பட்டுள்ள சோதனையாகவேத் தெரிகிறது என்றார்.

இந்திய அணி குறித்து தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் கிரீம் ஸ்மித் பேசியதாவது: இங்கிலாந்து அணி அதன் சொந்த மண்ணில் விளையாடுகிறது. அவர்களது சொந்த மண்ணில் அவர்கள் மிகவும் சிறப்பாக விளையாடுவார்கள். அவர்களுக்கு அங்குள்ள சூழல் நன்றாக தெரியும் என்பதால், அதனைப் பயன்படுத்தி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவர். இந்த தொடர் ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணிக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கப் போகிறது. இந்திய அணியில் அனுபவம் வாய்ந்த பல மூத்த வீரர்கள் தற்போது இல்லை. அதனால், தனிப்பட்ட வீரர்கள் மீதான அழுத்தம் அதிகமாக இருக்கும். பந்துவீச்சில் மிகப் பெரிய பொறுப்பை ஜஸ்பிரித் பும்ரா ஏற்றுக்கொள்ளப் போகிறார் என நினைக்கிறேன். இங்கிலாந்தின் சூழல்களைக் கருத்தில் கொண்டு பார்க்கையில், இந்திய அணியைக் காட்டிலும் இங்கிலாந்து அணியே வலுவாக உள்ளது என்றார்.

இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் அண்மையில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின்போது, மூத்த வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.