ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரருக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் அரையிறுதிப் போட்டியில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை மூன்று அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. குரூப் ஏ பிரிவில் இருந்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளும், குருப் பி பிரிவில் ஆஸ்திரேலிய அணியும் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளன.
இதையும் படிக்க: கேப்டன் பொறுப்பிலிருந்து விலகவுள்ளதாக ஜோஸ் பட்லர் அறிவிப்பு!
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டி மழையினால் கைவிடப்பட ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு முன்னேறியது. அந்த அணி அரையிறுதியில் இந்தியா அல்லது நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடவுள்ளது.
மேத்யூ ஷார்ட்டுக்கு காயம்
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடிய மேத்யூ ஷார்ட்டுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால், அவர் அரையிறுதிப் போட்டியில் விளையாடுவது சந்தேகம் எனக் கூறப்படுகிறது.
ஆஸ்திரேலிய அணி அதன் முதல் போட்டியில் இங்கிலாந்தை எதிர்த்து 351 ரன்களை துரத்தியபோது, மேத்யூ ஷார்ட் அபாரமாக விளையாடி 63 ரன்கள் குவித்தார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான நேற்றையப் போட்டியில் அவர் 15 பந்துகளில் 20 ரன்கள் எடுத்தார்.
மேத்யூ ஷார்ட் அரையிறுதிப் போட்டியில் விளையாடுவது குறித்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பேசியதாவது: மேத்யூ ஷார்ட் காயத்தால் சிரமப்படுவதாக நினைக்கிறேன். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அவரால் இயல்பாக விளையாட முடியவில்லை. அரையிறுதிப் போட்டிக்கு முன்பாக அவர் குணமடைந்து அணியில் விளையாடுவாரா என்பது உறுதியாகத் தெரியவில்லை. அவரது இடத்தை நிரப்புவதற்கு எங்களிடம் வீரர்கள் இருக்கிறார்கள் என்றார்.
மேத்யூ ஷார்ட் அரையிறுதியில் விளையாட முடியாத பட்சத்தில், அவருக்குப் பதிலாக ஜேக் ஃபிரேசர் மெக்கர்க் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படலாம். ஆல்ரவுண்டர் ஆரோன் ஹார்டி மற்றும் மாற்று வீரர் கூப்பர் கன்னோலியும் மேத்யூ ஷார்ட்டுக்குப் பதிலாக களமிறங்க தயாராக இருக்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

என்னுடைய சிறந்த இன்னிங்ஸ் இதுதான்; மனம் திறந்த ஜேக்கப் பெத்தேல்!

அறிமுகமாக காத்திருக்கும் வைபவ் சூர்யவன்ஷி; அழுத்தத்தில் இருக்கிறாரா சஞ்சு சாம்சன்?

அயர்லாந்து, இங்கிலாந்து தொடர்களிலிருந்து நிதீஷ் குமார் ரெட்டி விலகல்!







