இந்திய அணி பாகிஸ்தானைவிட சிறந்த அணி என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாட்காஸ்டர் லெக்ஸ் பிரிட்மேனிடம் கலந்துரையாடிய பிரதமர் நரேந்திர மோடி இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: நான் கிரிக்கெட்டில் அனுபவசாலி கிடையாது. கிரிக்கெட்டில் உள்ள நுணுக்கங்கள் குறித்து எனக்குத் தெரியாது. எந்த அணி சிறந்த அணி என்பதை கிரிக்கெட்டின் நுணுக்கங்கள் தெரிந்தவர்கள்தான் கூற வேண்டும். ஆனால், சில நாள்களுக்கு முன்பு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் விளையாடின. அந்தப் போட்டியின் முடிவுகள் எந்த அணி சிறந்த அணி என்பதை வெளிக்கொணர்ந்தது.
ஒட்டுமொத்த உலகையும் உற்சாகமாக வைத்திருக்கும் ஆற்றல் விளையாட்டுக்கு இருக்கிறது என நினைக்கிறேன். விளையாட்டில் கடைபிடிக்கப்படும் நேர்மை பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்களை ஒன்றிணைக்கிறது. அதனால், நான் எப்போதும் விளையாட்டை குறைவாக மதிப்பிடமாட்டேன். மனித குலத்தின் பரிணாம வளர்ச்சியில் விளையாட்டு மிகப் பெரிய பங்களிப்பை வழங்கியுள்ளதாக நான் நம்புகிறேன். விளையாட்டு வெறும் விளையாட்டு மட்டுமல்ல, அது மக்களை ஒன்றிணைக்கிறது என்றார்.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான குரூப் ஸ்டேஜ் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி சாம்பியன்ஸ் டிராபியை வென்றது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

51,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கினார் பிரதமர் மோடி!

இத்தாலியில் பிரதமர் ஜார்ஜியா உடன் மோடி சந்திப்பு - புகைப்படங்கள்

10 கோடி பார்வையாளர்களைக் கடந்த மோடி - மெலோனி விடியோ!

நெதர்லாந்து, ஸ்வீடனை தொடர்ந்து நார்வே புறப்பட்டார் பிரதமர் மோடி!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



