புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

ரோஹித் சர்மா, விராட் கோலி ஓய்வு பெற்றதால் அச்சமடையத் தேவையில்லை: முன்னாள் இந்திய வீரர்

டெஸ்ட் போட்டிகளிலிருந்து ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஓய்வு பெற்றதால் ரசிகர்கள் பெரிய அளவில் அச்சமடையத் தேவையில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார்.

News image

ரோஹித் சர்மா - விராட் கோலி (கோப்புப் படம்)

Updated On :15 மே 2025, 12:07 pm

DIN

டெஸ்ட் போட்டிகளிலிருந்து ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஓய்வு பெற்றதால் ரசிகர்கள் பெரிய அளவில் அச்சமடையத் தேவையில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் அண்மையில் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள நிலையில், இருவரும் ஓய்வு பெற்றுள்ளது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

அச்சமடையத் தேவையில்லை

டெஸ்ட் போட்டிகளிலிருந்து ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஓய்வு பெற்றுள்ளதால், ரசிகர்கள் அச்சமடையத் தேவையில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்துள்ளதால், இந்திய அணியின் எதிர்காலம் குறித்து சில ரசிகர்கள் கவலையாக இருப்பார்கள் எனத் தெரியும். இந்திய அணியின் சிறந்த வீரர்களான சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், விவிஎஸ் லக்‌ஷ்மன் மற்றும் சௌரவ் கங்குலி ஒரே நேரத்தில் ஓய்வு பெற்றதால், ரசிகர்கள் கவலையடைந்தனர். ஆனால், சில ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசையில் முதலிடம் பிடித்தது.

உலகின் சிறந்த அணியாகவும் இந்திய அணி மாறியது. அதனால், இந்தியாவில் விளையாட்டு மிகவும் பிரபலமாக இருப்பதால், இந்திய அணிக்காக விளையாட போதுமான இளம் வீரர்கள் தொடர்ந்து இருந்துகொண்டிருப்பதாக நான் உறுதியாக நம்புகிறேன். வெளிநாட்டு ஆடுகளங்களில் விளையாடும்போது, உங்களுக்கு சிறிது நேரம் தேவைப்படும். ஏனெனில், வெளிநாட்டு ஆடுகளங்களில் பேட்டிங் செய்வது கடினம்.

ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் அணியில் இருந்தபோதும், நாம் நியூசிலாந்துக்கு எதிராகவும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் தொடர்களை இழந்தோம். அதனால், தற்போதுள்ள இந்திய அணி இழப்பதற்கு ஒன்றுமில்லை. புதிய இந்திய அணிக்கு எனது வாழ்த்துகள் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.