FOLLOW US

ON GOOGLE DISCOVER

குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சுடிஜிட்டல் கைது செய்து சிறுமி பாலியல் வன்கொடுமை! 3 மாதங்களாக அடைத்து வைத்திருந்தவர் கைதுமொழி எனக்கு ஒரு தடையாக இருக்கிறது! நான் அன்று ஆவேசப்பட்டது உண்மைதான்! மரிய வில்சன்டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் ராஜிநாமா! டாடா பங்குகள் 3% சரிவு!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு வி.சி.க. ஆதரவுதொகுதி மறுவரையறை! முதல்வர் விஜய்யின் தனித் தீர்மானத்துக்கு திமுக ஆதரவு!தொகுதி மறுவரையறை தனித்தீர்மானத்துக்கு அதிமுக எதிர்ப்பு!தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம் (ஆக. 12)தொகுதி மறுவரையறை: தனித்தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய்!தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு!ஆடி அமாவாசை: மேட்டூரில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி!மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,689 கன அடியாக அதிகரிப்பு!தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

இந்தியாவில் டி20 தொடர்... முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆப்கன் கிரிக்கெட் வாரியம்!

இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான தேதிகளை ஆப்கானிஸ்தான் அறிவித்துள்ளதைப் பற்றி...

News image
Updated On :12 ஆகஸ்ட் 2026, 1:03 pm IST

இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான தேதிகளை ஆப்கானிஸ்தான் அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே போன்ற சிறிய கிரிக்கெட் அணிகளின் முன்னேற்றத்துக்காக அவர்களின் சொந்த மண்ணிலேயே கிரிக்கெட் தொடரை ஏற்பாடு செய்து இந்திய கிரிக்கெட் வாரியம் விளையாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளது. சமீபத்தில் ஜிம்பாப்வேவுக்குச் சென்று அங்கு ஹராரேயில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி தொடரைக் கைப்பற்றியது.

அதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலும் விளையாட இந்தியா திட்டமிட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தும் போட்டிகள் அனைத்தும் பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக துபை போன்ற பொதுவான திடல்களிலேயே நடத்தப்பட்டு வருகின்றன.

இதனால், ஆப்கானிஸ்தான் - இந்தியா மோதும் போட்டிகள் இந்தியாவிலேயே நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் போட்டியை நடத்தும் நாடாகவும், இந்திய அணி வெளிநாட்டு அணியாகவும் களமிறங்குகிறது.

Story image

இவ்விரு அணிகளும் மோதும் 3 போட்டிகளுக்கான தேதிகளை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

அதன்படி, வருகிற செப். 13 ஆம் தேதி முதல் போட்டியும், செப். 15 இரண்டாவது போட்டியும், செப். 17 ஆம் தேதி 3-வது போட்டியும் நடைபெறுகிறது. இந்த மூன்று போட்டிகளும் தில்லியில் உள்ள அருண் ஜேட்லி கிரிக்கெட் திடலில் நடைபெறுகின்றன.

அயர்லாந்து, இங்கிலாந்துக்கு எதிரான தோல்விக்குப் பின்னர் ஜிம்பாப்வேவுக்கு எதிராக வெற்றி பெற்று மீண்டுள்ள கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில் இந்திய டி20 அணிக்கு, இந்தத் தொடர் மிகவும் முக்கியமான தொடராக அமைந்திருக்கிறது.

ஆசிய தொடருக்கான தனது டி20 இந்திய அணியை ஏற்கனவே இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துவிட்டது. மேலும் ஆப்கானிஸ்தான் தொடருக்கான அணியும் பெரும்பாலும் இதேபோன்றுதான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசிய தொடருக்கான இந்திய அணி

ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அபிஷேக் சர்மா, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, திலக் வர்மா (துணை கேப்டன்), அக்‌ஷர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் குமார் ரெட்டி, வருண் சக்ரவர்த்தி, ரவி பிஷ்னோய், ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், வைபவ் சூர்யவன்ஷி, பும்ரா.

Summary

The Afghanistan Cricket Board (ACB) and the Board of Control for Cricket in India (BCCI) have confirmed that Afghanistan will host India in a three-match T20I series at the Arun Jaitley Cricket Stadium in Delhi from September 13 to 17, 2026.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.