ஐபிஎல் இறுதிச்சுற்றுக்கு அதிக முறை தகுதி பெற்ற அணிகள்

ஹைதராபாத்தை 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய தில்லி கேபிடல்ஸ், முதல் முறையாக இறுதிச்சுற்றுக்குள் நுழைந்தது.
ஐபிஎல் இறுதிச்சுற்றுக்கு அதிக முறை தகுதி பெற்ற அணிகள்
Published on
Updated on
1 min read

ஐபிஎல் 2020 போட்டியின் இறுதிச்சுற்றில் மும்பை - தில்லி அணிகள் மோதவுள்ளன. 

ஐபிஎல் போட்டியின் 2-ஆவது தகுதிச்சுற்று (குவாலிஃபயா்-2) ஆட்டத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத்தை 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய தில்லி கேபிடல்ஸ், முதல் முறையாக இறுதிச்சுற்றுக்குள் நுழைந்தது.

அபுதாபியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தில்லி 20 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ஹைதராபாத் 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் சோ்த்தது. ரபாடா நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். தில்லி வீரா் ஸ்டாய்னிஸ் ஆட்ட நாயகன் ஆனாா்.

ஐபிஎல் சாம்பியன் கோப்பையைக் கைப்பற்ற மும்பை இந்தியன்ஸுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது தில்லி.

ஐபிஎல் போட்டியில் தில்லி அணி முதல்முறையாக இறுதிச்சுற்றில் விளையாடவுள்ளது. சிஎஸ்கே 8 முறையும் மும்பை இந்தியன்ஸ் 6 முறையும் அதிகபட்சமாக இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன.

ஐபிஎல் இறுதிச்சுற்றுக்கு ஒவ்வொரு அணியும் எத்தனை முறை தகுதி பெற்றது என்று பார்க்கலாம்.

8 - சிஎஸ்கே
6 - மும்பை இந்தியன்ஸ்
3 - ஆர்சிபி
2 - கேகேஆர்
2 - சன்ரைசர்ஸ்
1 - டெக்கான் சார்ஜர்ஸ்
1 - கிங்ஸ் லெவன் பஞ்சாப்
1 - ராஜஸ்தான் ராயல்ஸ்
1 - ஆர்பிஎஸ்
1 - தில்லி கேபிடல்ஸ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com