இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஐபிஎல் கோப்பையை இந்த அணி வெல்ல வேண்டும்: கெவின் பீட்டர்சன் விருப்பம்

இந்த வருட ஐபிஎல் போட்டியை தில்லி கேபிடல்ஸ் அணி வெல்லவேண்டும் என முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன்..

News image
Updated On :21 செப்டம்பர் 2020, 10:03 am

DIN

இந்த வருட ஐபிஎல் போட்டியை தில்லி கேபிடல்ஸ் அணி வெல்லவேண்டும் என முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் விருப்பம் தெரிவித்துள்ளார். 

ஐக்கிய அரபு அமீரகத்தில் நாளை தொடங்கும் ஐபிஎல் போட்டி, நவம்பா் 10-ம் தேதி வரை நடைபெறுகிறது. துபை, அபுதாபி, ஷாா்ஜாவில் உள்ள மைதானங்களில் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. ஐபிஎல் அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. முதல் ஆட்டத்தில் சென்னை - மும்பை அணிகள் மோதுகின்றன. 

ஐபிஎல் போட்டிக்காக துபை, அபுதாபிக்குச் சென்றுள்ள அனைத்து அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் இந்த வருட ஐபிஎல் போட்டி பற்றி இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் கூறியதாவது:

இந்த வருட ஐபிஎல் போட்டி வித்தியாசமானதாக இருக்கும். ரசிகர்கள் கிடையாது. எல்லோரும் பாதுகாப்பு வளையத்துக்குள் தான் இருக்கவேண்டும். இச்சூழலைச் சமாளிக்கும் அணியே ஐபிஎல் போட்டியை வெல்லும். 

தில்லி கேபிடல்ஸ் அணி ஐபிஎல் போட்டியை வெல்லவேண்டும் என விரும்புகிறேன். ஏனெனில் அந்த அணி எனக்கு மிகவும் பிடித்தமானது. எனினும் எந்த அணி வெல்லும் என என்னால் கணிக்க முடியாது. அதற்கு போட்டி தொடங்கி இரு வாரங்களாவது ஆன பிறகுதான் சொல்ல முடியும். 

ஐபிஎல் எனக்கு மிகவும் பிடிக்கும். இந்தியா எனக்கு வழங்கிய அனைத்தும் பிடிக்கும். இந்தியக் கலாசாரம். நட்பு என அனைத்தையும் நான் அனுபவித்துள்ளேன். வணிக ரீதியாகவும் நான் பலனடைந்துள்ளேன். உணர்வுபூர்வமான பந்தம் இந்தியாவிடம் எனக்கு உண்டு. இந்தியாவுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன் என்றார்.     

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.