இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

போலார்ட் புதிய மைல்கல்: ஜெர்சி வழங்கி கௌரவித்த மும்பை அணி

மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆல்-ரௌண்டர் கைரன் போலார்ட் 150-வது முறையாக இன்று (புதன்கிழமை) ஐபிஎல்-இல் களமிறங்கியுள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :23 செப்டம்பர் 2020, 3:07 pm

DIN


மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆல்-ரௌண்டர் கைரன் போலார்ட் 150-வது முறையாக இன்று (புதன்கிழமை) ஐபிஎல்-இல் களமிறங்கியுள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகளைச் சேர்ந்த கைரன் போலார்ட் 2010-இல் மும்பை அணியில் இணைந்தார். கடந்த 10 ஆண்டுகளாக மும்பை அணிக்காக விளையாடி வரும் அவருக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டம் 150-வது ஐபிஎல் ஆட்டம்.

மும்பை அணிக்காக 150 ஆட்டங்களில் விளையாடும் முதல் வீரர் போலார்ட். இதையொட்டி அவரை கௌரவிக்கும் விதமாக 150 என்ற எண்ணைக் கொண்ட ஜெர்சியை மும்பை அணி அவருக்கு வழங்கியுள்ளது.

அவர் இதுவரை 14 அரைசதங்கள் உள்பட 2,773 ரன்கள் எடுத்துள்ளார், 56 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.