காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

மைதானத்தின் அளவுக்கேற்ப சூப்பர் ஓவரில் விளையாடிய விராட் கோலி

மைதானத்தின் அளவுக்கேற்ப சூப்பர் ஓவரில் திட்டமிட்டு விளையாடியதாக ஆர்சிபி அணி கேப்டன் விராட் கோலி...

News image
Updated On :29 செப்டம்பர் 2020, 9:41 am

DIN

மைதானத்தின் அளவுக்கேற்ப சூப்பர் ஓவரில் திட்டமிட்டு விளையாடியதாக ஆர்சிபி அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

பெங்களூர் - மும்பை அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஐபிஎல் ஆட்டத்தில் 400 ரன்களுக்கு மேல் எடுக்கப்பட்டும் தமிழக இளம் வீரர் வாஷிங்டன் சுந்தர் அற்புதமாகப் பந்துவீசி திறமையை நிரூபித்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 10-ஆவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், சூப்பர் ஓவர் முறையில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது. 

துபையில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பெங்களூர் 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 201 ரன் எடுத்தது. அடுத்து ஆடிய மும்பையும் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் அடிக்க, ஆட்டம் சமன் ஆனது. 

வெற்றியாளரை தீர்மானிக்கும் சூப்பர் ஓவரில் முதலில் ஆடிய மும்பை ஒரு விக்கெட் இழப்புக்கு 7 ரன்கள் எடுக்க, அடுத்து ஆடிய பெங்களூர் விக்கெட் இழப்பின்றி 11 ரன்கள் எடுத்து வென்றது. 

துபை மைதானத்தின் பவுண்டரி அளவுகள் வித்தியாசமாக உள்ளதால் அதற்கேற்றபடி திட்டமிட்டுள்ளது ஆர்சிபி அணி. ஸ்கொயர் பவுண்டரி ஒரு பக்கம் 82 மீட்டராகவும் இன்னொரு பக்கம் 68 மீட்டராகவும் உள்ளதால் சிக்ஸர்கள் அடிக்க பேட்ஸ்மேன்கள் சிலசமயம் தடுமாறியுள்ளார்கள். சூப்பர் ஓவரில் இரு அணி வீரர்களாலும் சிக்ஸர் அடிக்க முடியவில்லை. மும்பை அணி ஒரு பவுண்டரியும் ஆர்சிபி அணி இரு பவுண்டரிகளும் அடித்தார்கள்.

முதலில் கோலி விளையாடியபோது 11 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே எடுத்தார். எனினும் சூப்பர் ஓவரில் அவரும் டி வில்லியர்ஸூம் களமிறங்கினார்கள். இதற்கான காரணமாக கோலி கூறியதாவது:

மைதானத்தின் அசாதாரணமான பவுண்டரி அளவுகளைக் கொண்டு சூப்பர் ஓவர் பேட்ஸ்மேன்களைத் தேர்வு செய்தோம். பெரிய பவுண்டரிகள் பக்கம் பும்ரா ஓவரை வீசியதால் இரண்டு ரன்களை ஓடி எடுக்கும் வீரர்கள் தேவை. இதனால் தான் நானும் டி வில்லியர்ஸும் களமிறங்கினோம் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.