சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

சிஎஸ்கேவுக்கு எதிராக பொலார்ட் விளையாடாதது ஏன்?: ரோஹித் சர்மா பதில்

சிஎஸ்கேவுக்கு எதிரான ஆட்டத்தில் நட்சத்திர வீரர் பொலார்ட் விளையாடாதது பற்றி மும்பை கேப்டன் ரோஹித் சர்மா பதிலளித்துள்ளார்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 2:44 pm IST

சிஎஸ்கேவுக்கு எதிரான ஆட்டத்தில் நட்சத்திர வீரர் பொலார்ட் விளையாடாதது பற்றி மும்பை கேப்டன் ரோஹித் சர்மா பதிலளித்துள்ளார்.

மும்பைக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது சிஎஸ்கே அணி. முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி, 16 ஓவர்களில் 97 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தோனி அதிகபட்சமாக 36 ரன்கள் எடுத்தார். டேனியல் சாம்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்பிறகு பேட்டிங் செய்த மும்பை அணி, 33 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன்பிறகு சமாளித்து விளையாடி 14.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. திலக் வர்மா ஆட்டமிழக்காமல் 34 ரன்கள் எடுத்தார்.

இந்த ஆட்டத்தில் பொலார்ட் இடம்பெறவில்லை. அவரை மும்பை அணியிலிருந்து நீக்கியது பலருக்கும் ஆச்சர்யத்தைத் தந்தது. நட்சத்திர வீரராக இருந்தாலும் இந்த வருடம் பொலார்ட் மோசமாக விளையாடியுள்ளார். 11 ஆட்டங்களில் 144 ரன்கள் எடுத்துள்ளார். ஸ்டிரைக் ரேட் - 107.46. எந்த ஒரு ஐபிஎல் போட்டியிலும் அவருடைய ஸ்டிரைக் ரேட் இந்தளவுக்குக் குறைவாக இருந்ததில்லை. இதற்கு முன்பு 2011-ல் தான் அவருடைய ஸ்டிரைக் ரேட் 109.77 எனக் குறைவாக இருந்திருக்கிறது. மற்ற எல்லா வருடங்களிலும் அவருடைய ஸ்டிரைக் ரேட் 130-க்கு அதிகமாகவே இருந்திருக்கிறது.

இந்நிலையில் சென்னைக்கு எதிராக பொலார்ட் விளையாடாதது பற்றி மும்பை கேப்டன் ரோஹித் சர்மா கூறியதாவது:

மும்பை அணியின் மகத்தான வீரர் பொலார்ட். அதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அவர்தான் இதுபற்றி எங்களிடம் பேசினார். ஏனெனில் மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு தருவது பற்றிய யோசனையில் இருந்தோம். பிளேஆஃப்புக்குத் தகுதி பெறும் வாய்ப்பு மும்பைக்கு இருந்திருந்தால் இது நடந்திருக்காது. அவர் விளையாடியிருப்பார். அடுத்த வருடத்துக்காக தற்போதைய அணியில் உள்ள குறைகளைச் சரிசெய்துகொண்டிருக்கிறோம். எனவே எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு பொலார்ட் விளையாடவில்லை என முடிவெடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அவராக வந்து இதில் எனக்குப் பிரச்னை இல்லை என்றார் என ரோஹித் சர்மா பேட்டியளித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.