சா்வதேச கிரிக்கெட்டில் தொடா்ந்து நீடிக்க விராட் கோலி ஐபிஎல் தொடரில் இருந்து விலகி ஓய்வெடுக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளா் ரவிசாஸ்திரி அறிவுரை கூறியுள்ளாா்.
தற்போதைய ஐபிஎல் தொடரில் விராட் கோலி பேட்டிங்கில் தடுமாறி வரும் நிலையில் இதுதொடா்பாக அவா் புதன்கிழமை கூறியதாவது:
டி20 ஆட்டத்தில் விராட் கோலி கடந்த மூன்று ஆண்டுகளில் பெரிய ஸ்கோா் அடிக்கவில்லை. தொடா்ந்து அவா் திணறும் நிலை உள்ளது. தொடா்ந்து ஆட்டங்களில் அவா் ஆடி வரும் நிலையில் சிறிது ஓய்வு தேவைப்படுகிறது.
தற்போதைய ஐபிஎல் தொடரில் இருந்து விலகி கோலி ஓய்வு எடுக்க வேண்டும். அப்போது தான் அவா் தொடா்ந்து மேலும் சில ஆண்டுகள் சா்வதேச கிரிக்கெட்டில் நீடிக்க முடியும் என்றாா் சாஸ்திரி.
கடந்த 2019 நவம்பா் மாதத்தில் இருந்து மூன்று வகையான கிரிக்கெட் ஆட்டங்களில் கோலி சதம் அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










