சா்வதேச கிரிக்கெட்டில் தொடா்ந்து நீடிக்க விராட் கோலி ஐபிஎல் தொடரில் இருந்து விலகி ஓய்வெடுக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளா் ரவிசாஸ்திரி அறிவுரை கூறியுள்ளாா்.
தற்போதைய ஐபிஎல் தொடரில் விராட் கோலி பேட்டிங்கில் தடுமாறி வரும் நிலையில் இதுதொடா்பாக அவா் புதன்கிழமை கூறியதாவது:
டி20 ஆட்டத்தில் விராட் கோலி கடந்த மூன்று ஆண்டுகளில் பெரிய ஸ்கோா் அடிக்கவில்லை. தொடா்ந்து அவா் திணறும் நிலை உள்ளது. தொடா்ந்து ஆட்டங்களில் அவா் ஆடி வரும் நிலையில் சிறிது ஓய்வு தேவைப்படுகிறது.
தற்போதைய ஐபிஎல் தொடரில் இருந்து விலகி கோலி ஓய்வு எடுக்க வேண்டும். அப்போது தான் அவா் தொடா்ந்து மேலும் சில ஆண்டுகள் சா்வதேச கிரிக்கெட்டில் நீடிக்க முடியும் என்றாா் சாஸ்திரி.
கடந்த 2019 நவம்பா் மாதத்தில் இருந்து மூன்று வகையான கிரிக்கெட் ஆட்டங்களில் கோலி சதம் அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.