சிஎஸ்கே அணியின் புதிய சீருடை அறிமுகம்
By DIN | Published On : 23rd March 2022 04:18 PM | Last Updated : 23rd March 2022 04:18 PM | அ+அ அ- |

ஐபிஎல் 2022 போட்டியில் விளையாடும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சீருடை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஐபிஎல் 2022 போட்டி மார்ச் 26-ல் தொடங்கி மே 29 அன்று நிறைவுபெறவுள்ளது. 70 லீக் ஆட்டங்கள் மும்பை, புணேவில் நடைபெறவுள்ளன. 10 அணிகளும் தலா 14 ஆட்டங்களில் விளையாடவுள்ளன. 10 அணிகளும் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் 5 அணிகளுடன் இருமுறையும் மீதமுள்ள 4 அணிகளுடன் ஒருமுறையும் விளையாடவுள்ளன. குரூப் ஏ-வில் மும்பை, கொல்கத்தா, ராஜஸ்தான், தில்லி, லக்னெள ஆகிய அணிகளும் குரூப் பி-வில் சென்னை, சன்ரைசர்ஸ், ஆர்சிபி, பஞ்சாப், குஜராத் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன. சிஎஸ்கே அணி - மும்பை, சன்ரைசர்ஸ், ஆர்சிபி, பஞ்சாப், குஜராத் ஆகிய அணிகளுடன் இருமுறையும் மீதமுள்ள 4 அணிகளுடன் ஒருமுறையும் லீக் சுற்றில் விளையாடவுள்ளது.
இந்நிலையில் சிஎஸ்கே அணியின் புதிய சீருடை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சீருடையில் சிஎஸ்கேவின் இலச்சினைக்கு மேலே நான்கு நட்சத்திரங்கள் இடம்பெற்றுள்ளன. சிஎஸ்கே அணி 2010, 2011, 2018, 2021 ஆகிய 4 ஆண்டுகளிலும் ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளதால் அதைக் குறிப்பிடும் விதமாகச் சீருடையில் 4 நட்சத்திரங்களும் இடம்பெற்றுள்ளன. டிவிஎஸ் யூரோகிரிப் டயர்ஸ் அணியின் முக்கிய விளம்பரதாரராக இருப்பதால் அந்நிறுவனத்தின் பெயர் சீருடையின் முன்பக்கத்தில் பெரிதாக இடம்பெற்றுள்ளது.