47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சிஎஸ்கே அணி ஐபிஎல் கோப்பையை வெல்லும்: மேத்யூ ஹேடன்

ஐபிஎல் போட்டியை வெல்லக்கூடிய அளவுக்கு சிஎஸ்கே வலுவான அணியாக உள்ளது.

News image
Updated On :31 மார்ச் 2022, 11:20 am

DIN

ஐபிஎல் 2022 போட்டியை சிஎஸ்கே அணி வெல்லும் என அந்த அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹேடன் கூறியுள்ளார்.

ஐபிஎல் 2022 போட்டியில் சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த வருட ஐபிஎல் போட்டியில் கேப்டனாக அல்லாமல் வீரராக மட்டுமே விளையாட தோனி முடிவெடுத்துள்ளார். இதனால் இந்த வருட ஐபிஎல் போட்டியில் ஜடேஜா தலைமையில் சிஎஸ்கே அணி விளையாடி வருகிறது. 2012 முதல் சிஎஸ்கே அணியில் விளையாடும் ஜடேஜா, அந்த அணியின் 3-வது கேப்டன் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார். தோனி தலைமையில் சிஎஸ்கே அணி ஐபிஎல் கோப்பையை 4 முறையும் சாம்பியன்ஸ் லீக் கோப்பையை 2 முறையும் வென்றுள்ளது. 

இந்நிலையில் முன்னாள் வீரர் மேத்யூ ஹேடன் ஒரு பேட்டியில் சிஎஸ்கே அணி பற்றி கூறியதாவது:

கேகேஆர் அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் தோற்றதால் சிஎஸ்கே அணி மனம் உடைந்துவிடாது. அந்த ஆட்டத்தில் நிறைய நேர்மறை விஷயங்கள் நடைபெற்றுள்ளன. முதல் ஆட்டத்தில் மேல்வரிசை வீரர்கள் அரிதான முறையில் தோல்வியடைந்துள்ளார்கள். அணியில் ஏராளமான அனுபவசாலிகள் உள்ளார்கள். ஒரு வலுவான அணியாக அவர்கள் மீண்டு வருவார்கள். மொயீன் அலி இனி வரும் ஆட்டங்களில் இடம்பெறுவார். ஐபிஎல் போட்டியை வெல்லக்கூடிய அளவுக்கு சிஎஸ்கே வலுவான அணியாக உள்ளது. அதனால் தான் அது ஆபத்தான அணியாக உள்ளது என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.