அச்சமின்றி விளையாட ஆஷிஷ் நெஹ்ரா ஊக்கமளிப்பதாக குஜராத் டைட்டன்ஸ் வீரர் சாய் கிஷோர் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் சண்டீகரில் நடைபெற்ற நேற்றைய ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய சாய் கிஷோர் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
இந்த நிலையில், அச்சமின்றி விளையாட ஆஷிஷ் நெஹ்ரா ஊக்கமளிப்பதாக சாய் கிஷோர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: நான் 20-25 நாட்களுக்குப் பிறகு விளையாடினேன். அதனால், போட்டியில் மகிழ்ச்சியுடன் எனது 120 சதவிகித உழைப்பை கொடுக்க விரும்பினேன். அணியின் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா சிறப்பான சூழலை அணிக்குள் உருவாக்கியுள்ளார். அச்சமின்றி அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அவர் ஊக்கமளிக்கிறார். அவர் என்னை சுதந்திரமாக விளையாடக் கூறினார் என்றார்.
சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய சாய் கிஷோருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஐபிஎல் வரலாற்றில் அதிகம் பார்க்கப்பட்ட போட்டி எது தெரியுமா?

இன்றைய செய்திகள் மே 31 - நேரலை!

அடுத்தடுத்த ஓவர்களில் ஷுப்மன் கில், சாய் சுதர்சன் அவுட்; தடுமாறும் குஜராத் டைட்டன்ஸ்!

பார்ட்னர்ஷிப்பில் வரலாறு படைத்த ஷுப்மன் கில் - சாய் சுதர்சன்!
விடியோக்கள்
கண்ணதாசன் கவிஞரான கதை| Kannadasan 100 | UN Kannan interview | Kaviyarasu|கண்ணதாசன் நூற்றாண்டு | EP -2





