திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

விதிமீறலில் ஈடுபட்ட விராட் கோலிக்கு அபராதம்!

ஐபிஎல் விதியை மீறியதற்காக பெங்களூரு அணியின் விராட் கோலிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

News image

படம் | ஐபிஎல்

Updated On :22 ஏப்ரல் 2024, 6:18 pm IST

ஐபிஎல் விதியை மீறியதற்காக பெங்களூரு அணியின் விராட் கோலிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது.

இந்தப் போட்டியில் விராட் கோலி ஆட்டமிழந்த விதம் மாபெரும் பேசுபொருளானது. ஹர்சித் ராணா வீசிய ஃபுல் டாஸ் பந்தில் விராட் கோலி ஆட்டமிழந்தார். இடுப்புக்கு மேல் பந்து சென்றபோதிலும், விராட் கோலி க்ரீசை விட்டு வெளியே வந்து பந்தை அடித்ததால் அவருக்கு நடுவர்கள் அவுட் கொடுத்தனர். இதனால், விராட் கோலி கடும் அதிருப்தியடைந்தார். நடுவர்களுடன் விவதாத்தில் ஈடுபட்டு பின்னர் பெவிலியன் திரும்பினார். அதிருப்தியில் பெவிலியன் திரும்பும் வழியில் வைக்கப்பட்டிருந்த குப்பைத் தொட்டியை தனது கையுறைகளால் (க்ளௌஸ்) தாக்கினார்.

விராட் கோலி

விராட் கோலி - படம் | ஐபிஎல்

இந்த நிலையில், ஐபிஎல் விதிமுறையை மீறி நடுவர்களுடன் விராட் கோலி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அவருக்கு போட்டிக்கான சம்பளத்திலிருந்து 50 சதவிகிதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஐபிஎல் நிர்வாகம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: டாடா ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் (36-வது போட்டி) பெங்களூரு வீரர் விராட் கோலி ஐபிஎல் விதிமுறையை மீறியதற்காக அவருக்கான போட்டிக்கான சம்பளத்திலிருந்து 50 சதவிகிதம் அபராதம் விதிக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் விதிமுறையில் படிநிலை 1-ன் கீழ் விதி 2.8-ன் படி நடுவரின் தீர்ப்பே இறுதியானது. நேற்றையப் போட்டியில் இந்த விதிமுறையை மீறியதற்காக விராட் கோலிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

விதிமீறலை ஒப்புக்கொண்டு அபராதத்தை செலுத்த விராட் கோலி சம்மதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.