தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

"நிம்மதியாக உறங்குவோம்": ஒரு மாதத்துக்குப் பிறகு வென்ற நெகிழ்ச்சியில் ஆர்சிபி கேப்டன்!

ஒரு மாதத்துக்குப் பிறகு வென்ற மகிழ்ச்சியில் ஆர்சிபி கேப்டன் டு பிளெஸ்ஸி பேசியுள்ளார்.

News image

மகிழ்ச்சியில் ஆர்சிபி வீரர்கள்

Updated On :26 ஏப்ரல் 2024, 6:13 am

DIN

ஐபிஎல் போட்டியின் 41-ஆவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு 35 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாதை அதன் சொந்த மண்ணிலேயே வியாழக்கிழமை வென்றது.

முதலில் பெங்களூரு 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 206 ரன்கள் எடுக்க, ஹைதராபாத் 20 ஓவா்களில் விக்கெட்டுகள் இழப்புக்கு ரன்களே சோ்த்தது.

தொடா்ந்து 6 தோல்விகளுடன் துவண்டிருந்த பெங்களூரு, இந்த வெற்றியால் மீண்டிருக்கிறது.

மகிழ்ச்சியில் ஆர்சிபி வீரர்கள்

மகிழ்ச்சியில் ஆர்சிபி வீரர்கள்

இது குறித்து ஆர்சிபி அணியின் கேப்டன் டு பிளெஸ்ஸி பேசியதாவது:

கடைசி 2 போட்டிகளில் தோல்வியுற்றாலும் அற்புதமான பதிலடியை கொடுத்தோம். ஆனாலும் குழுவாக நம்பிக்கையை பெற வெற்றி பெற்றாக வேண்டும். பொய்யான நம்பிக்கையை குழுவுக்கு அளிக்க முடியாது. இந்த மாதிரியான செயல்பாடுகளே நிஜமான நம்பிக்கையைத் தரும். இந்த இரவு நிம்மதியாக தூங்குவோம்.

ஐபிஎல் தொடரில் போட்டிகள் வலுவாக இருக்கின்றன. அத்துடன் அணிகளும் மிக வலுவாக இருக்கின்றன. நமது 100 சதவிகிதத்தை கொடுத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். இல்லையெனில் தோல்விகளே எஞ்சும். முதல் பாதி தொடரில் விராட் கோலி மட்டுமே ரன்கள் அடித்தார். தற்போது பலரும் ரன்களை அடிக்கிறார்கள். சின்னசாமி மைதானத்தில் பந்து விசுவது மிகவும் கடினம். அதற்கான வழியை கண்டுபிடித்து விட்டோம்; ஆனாலும் அது கடினமாக இருக்கிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.