மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஐபிஎல் விதிகளை மீறியதற்காக கொல்கத்தா அணியின் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

News image
- படம் | ஐபிஎல்
Updated On :30 ஏப்ரல் 2024, 3:02 pm

DIN

ஐபிஎல் விதிகளை மீறியதற்காக கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணாவுக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் தில்லி கேப்பிடல்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இரு அணிகளுக்கும் இடையிலான நேற்றையப் போட்டியின்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணா ஐபிஎல் விதிமுறைகளை மீறியுள்ளார். அதன் காரணமாக அவருக்கு ஒரு போட்டியின் 100 சதவிகித சம்பளத்தை அபராதமாக விதித்தும், ஒரு போட்டியில் விளையாட தடை விதித்தும் ஐபிஎல் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Story image

தில்லி கேப்பிடல்ஸுக்கு எதிரான நேற்றையப் போட்டியில் அபிஷேக் போரெலின் விக்கெட்டினை வீழ்த்திய ஹர்ஷித் ராணா அவருக்கு முன்பாக பறக்கும் முத்தமிடுவது போல செய்கை காட்டினார். பெவிலியன் செல்லும் திசையை சுட்டிக்காட்டி அவர் மீண்டுமொரு பறக்கும் முத்தத்தை கொடுக்க முயற்சித்தார். அதேபோல ராஷிக் சலாம் பேட் செய்யும்போது, பேடின் மேலே ஸ்டம்புகள் மீது படாமல் செல்லும் பந்துக்கு அதிகப்படியாக நடுவர்களிடம் விக்கெட் கொடுக்கக் கோரி அவர் முறையிட்டார்.

இது தொடர்பாக ஐபிஎல் நிர்வாகம் தரப்பில் தெரிவித்திருப்பதாவது: ஐபிஎல் நடத்தை விதிமுறையில் படிநிலை ஒன்றின் கீழ் விதி 2.5-ஐ ராணா மீறியுள்ளார். அவர் தனது விதிமீறலை ஒப்புக் கொண்டு அதற்கான அபாராதத் தொகையை கட்ட சம்மதித்துள்ளார். படிநிலை ஒன்றில் வீரர் ஒருவர் விதிமீறலில் ஈடுபட்டால், நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Story image

சன் ரைசர்ஸ் ஹைதராபாதுக்கு எதிரான போட்டியில் மயங்க் அகர்வாலை ஆட்டமிழக்கச் செய்தபோதும், இதே விதிமீறலில் ஈடுபட்ட ராணாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. வருகிற மே 3 ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக நடைபெறும் போட்டியில் விளையாட ஹர்ஷித் ராணாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் நிர்வாகத்தின் இந்த முடிவு கொல்கத்தா அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

கொல்கத்தா அணிக்காக சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளைக் கைப்பற்றி வரும் சுனில் நரைன் மற்றும் வருண் சக்கரவர்த்தியுடன் இணைந்து ஹர்ஷித் ராணாவும் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார். இவர்கள் மூவரும் நடப்பு ஐபிஎல் தொடரில் தலா 11 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.