கொல்கத்தா அணியின் உரிமையாளரைப் புகழ்ந்த வருண் சக்கரவர்த்தி; எதற்காக தெரியுமா?

கொல்கத்தா அணியின் உரிமையாளர் ஷாருக்கான், அவரது ஊக்கம் நிறைந்த பேச்சுகளால் அணியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறார்.
வருண் சக்கரவர்த்தி
வருண் சக்கரவர்த்தி படம் | ஐபிஎல்

கொல்கத்தா அணியின் உரிமையாளர் ஷாருக்கான், அவரது ஊக்கம் நிறைந்த பேச்சுகளால் அணியில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக அந்த அணியின் சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சிறப்பாக விளையாடி வருகிறது. இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 8 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் வலுவாக உள்ளது.

வருண் சக்கரவர்த்தி
பேசுவதற்கும் முறையிருக்கிறது; கே.எல்.ராகுலுக்காக குரல் கொடுத்த இந்திய வீரர்!

ஐபிஎல் தொடரில் நேற்று முன் தினம் நடைபெற்ற போட்டியில் லக்னௌ அணி, சன் ரைசர்ஸிடம் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இந்தப் போட்டிக்குப் பிறகு, லக்னௌ அணியின் உரிமையாளர் சஞ்ஜிவ் கோயங்கா, கே.எல்.ராகுலை கேமரா முன்னிலையில் கடுமையாக சாடியது சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனத்துக்குள்ளானது. இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமியும் கே.எல்.ராகுலுக்கு ஆதரவாக லக்னௌ அணியின் உரிமையாளரை கடுமையாக விமர்சித்தார்.

இந்த நிலையில், கொல்கத்தா அணியின் உரிமையாளர் ஷாருக்கான் அவரது ஊக்கம் நிறைந்த பேச்சுகளால் அணியில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக அந்த அணியின் சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

படம் | ஐபிஎல்

இது தொடர்பாக அவர் பேசியதாவது: கொல்கத்தாவில் நடைபெறும் அனைத்துப் போட்டிகளுக்கும் ஷாருக்கான் வருகிறார். நாங்கள் நன்றாக செயல்படாத போட்டிகளின்போதும் வீரர்களின் உடைமாற்றும் அறைக்கு வந்து ஒவ்வொரு வீரரிடமும் பேசுவார். ஒவ்வொருவரையும் கட்டியணைத்து ஆறுதல் கூறுவார். பஞ்சாப் அணிக்கு எதிரான மிகப் பெரிய தோல்வியின் போதும் அவர் அதனையே செய்தார். இது வெறும் போட்டியே. கிரிக்கெட் நாளுக்கு நாள் மாறி வருகிறது. அடுத்தப் போட்டியில் சிறப்பாக செயல்பட முயற்சிக்கலாம் என பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டிக்குப் பிறகு கூறினார். அவரது வார்த்தைகள் அணியில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றார்.

வருண் சக்கரவர்த்தி
கே.எல். ராகுலை சாடிய லக்னெள உரிமையாளர்: நேரலையில் கண்ட ரசிகர்கள் ஆவேசம்!

கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இலக்காக நிர்ணயித்த 262 ரன்களை வெறும் 18.4 ஓவர்களில் எட்டி பஞ்சாப் கிங்ஸ் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com