புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் எம்.எஸ்.தோனி விளையாடுவாரா? காசி விஸ்வநாதன் பதிலால் ரசிகர்கள் உற்சாகம்!

அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் எம்.எஸ்.தோனி விளையாடுவார் என மிகுந்த நம்பிக்கையுள்ளதாக சிஎஸ்கே அணி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

எம்.எஸ்.தோனி

படம் | ஐபிஎல்

Updated On :23 மே 2024, 2:44 pm

DIN

அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் எம்.எஸ்.தோனி விளையாடுவார் என மிகுந்த நம்பிக்கையுள்ளதாக அந்த அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் கேப்டன் பதவியை ருதுராஜிடம் ஒப்படைத்துவிட்டு, ஒரு சாதாரண வீரராக அணியில் எம்.எஸ்.தோனி விளையாடினார். ஆட்டத்தின் இறுதியில் களமிறங்கி அதிரடியை வெளிப்படுத்திய எம்.எஸ்.தோனியின் ஆட்டம் அவரது ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்தது. பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற முடியாமல் சிஎஸ்கே வெளியேறிய பிறகு, அடுத்த ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவாரா என்ற கேள்வி பலருக்கும் எழுந்தது.

இந்த நிலையில், அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் எம்.எஸ்.தோனி விளையாடுவார் என மிகுந்த நம்பிக்கையுள்ளதாக அந்த அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளது தோனியின் ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளித்துள்ளது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: அடுத்த ஐபிஎல் தொடரில் எம்.எஸ்.தோனி விளையாடுவாரா என்ற கேள்விக்கு அவரால் மட்டுமே பதில் கூற முடியும். அவர் என்ன முடிவு எடுத்தாலும் அதனை நாங்கள் மதிக்கிறோம். அதனால், அவர் விளையாடுவாரா? மாட்டாரா? என்ற முடிவை அவரிடமே நாங்கள் விட்டுவிட்டோம்.

அவரது முடிவுகளை எப்போதும் அவர் சரியான நேரத்தில் அனைவருக்கும் தெரிவிப்பார் என நம் அனைவருக்குமேத் தெரியும். அதேபோல் இந்த முறையும் எம்.எஸ்.தோனி அவரது முடிவை உரிய நேரத்தில் அறிவிப்பார் என எதிர்பார்க்கலாம். ஆனால், அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவார் என்ற நம்பிக்கை மிகவும் அதிகமாக இருக்கிறது. இது ரசிகர்களுடைய எதிர்பார்ப்பு மட்டுமின்றி என்னுடைய எதிர்பார்ப்பும் கூட என்றார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் 73 பந்துகளை சந்தித்த எம்.எஸ்.தோனி 161 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.