மத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

தோனி எப்போது ஓய்வு பெறுவார்? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!

சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி ஓய்வு குறித்து...

News image

எம்.எஸ்.தோனி - படம்: ஏபி

Updated On :6 ஏப்ரல் 2025, 10:55 am IST

சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி ஓய்வு பெறுவது எப்போது என ஃபிளெமிங் பதிலளித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் திடலில் நடைபெற்ற நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

சேப்பாகில் தோல்வியை சந்திக்காத சிஎஸ்கே அணி தற்போது தோற்றுக்கொண்டே வருகிறது.

26 பந்துகளுக்கு 30 ரன்கள் எடுத்த தோனியை சிஎஸ்கே ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

போட்டிக்கு பிறகான செய்தியாளர் சந்திப்பில் சிஎஸ்கே பயிற்சியாளர் கூறியதாவது:

தோனி ஓய்வு குறித்து நான் முடிவெடுக்க முடியாது. எனக்கு அது குறித்து எந்தத்திட்டமும் இல்லை. அவருடன் வேலைப் பார்ப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

தோனி இப்போதும் வலுவாகவே இருக்கிறார். இதைப் பற்றி கேட்கக்கூட முடியாது. ஆனால், நீங்கள்தான் (செய்தியாளர்கள்) ஓய்வு குறித்து பேசுகிறீர்கள்.

தோனிக்கு அடிக்க வேண்டும் என எண்ணம் இருந்தது. ஆனால், பந்து சற்று நின்று வந்தது. முதல்பாதி பிட்ச் நன்றாக இருந்தது. 2ஆம் பாதி மெதுவாக ஆகிவிட்டது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.