மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

சாய் சுதர்ஷன் 82: ராஜஸ்தானுக்கு 218 ரன்கள் இலக்கு!

குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களுக்கு 217/6 ரன்கள் குவித்தது.

News image

அரைசதமடித்த சாய் சுதர்ஷன். - படம்: ஏபி

Updated On :9 ஏப்ரல் 2025, 9:25 pm IST

ஐபிஎல் போட்டியின் 23-ஆவது போட்டியில் டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 3ஆவது ஓவரில் முதல் விக்கெட் கிடைத்தது.

அடுத்ததாக ஜோடி சேர்ந்த சாய் சுதர்ஷன், ஜாஸ் பட்லர் அணியின் ஸ்கோரை உயர்த்தினார்கள்.

பட்லர் 36 ரன்களுக்கு ஆட்டமிழக்க அடுத்து வந்த ஷாருக்கான் அதிரடியாக விளையாடி 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

சாய் சுதர்ஷன் 82 ரன்களுக்கு ஆட்டமிழக்க ரஷித் கான் 4 பந்துகளில் 12 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இறுதியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 217/6 ரன்கள் எடுத்தது.

ராஜஸ்தான் சார்பில் தீக்‌ஷனா, தேஷ்பாண்டே தலா 2 விக்கெட்டுகளும் சந்தீப் சர்மா, ஆர்ச்சர் தலா 1 விக்கெட்டும் எடுத்தார்கள்.

இந்தப் போட்டியில் குஜராத் அணி வென்றால் புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

குஜராத் டைட்டன்ஸ் ஸ்கோர் கார்டு

ஷுப்மன் கில் - 2

சாய் சுதர்ஷன் - 82

ஜாஸ் பட்லர் - 36

ஷாருக்கான் - 36

ரூதர்ஃபோர்டு - 7

தெவாட்டியா - 24*

ரஷித் கான் - 12

அர்ஷத் கான் - 0*

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.